tamilnadu

img

‘பேரறிவுச் சிலை’க்கு கண்ணாடி பாலம்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நாகர்கோவில், டிச. 30 - கன்னியாகுமரி கடலில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு, பேரறிவுச் சிலை எனப் பெயர்சூட்டி, சிலையைக் காணச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முக்கடலும் சங்கமிக்கும் குமரிக் கடலில் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலை, கடந்த 2000-ஆவது ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.  இதன் 25-ஆம் ஆண்டு வெள்ளி  விழாவை டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு தமிழக அரசு நடத்துகிறது. இதற்காக, தமிழ்நாடு முதல்வர்  மு.க. ஸ்டாலின் குமரி முனை வந்த டைந்தார். இங்கு திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகை யில் தமிழக அரசால் ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் நாட்டின் முதலா வது கடல்சார் கண்ணாடி பாலத்தில் நடந்து வள்ளுவர் சிலையை வந்தடைந்தார்.

பேரறிவுச் சிலை

அத்துடன், சர்வதேச சுற்றுலாத் தலமான குமரியில் தமிழின் பெரு மையை பறைசாற்றும் வகையில் வான்புகழ் வள்ளுவர் சிலையை பேரறிவின் சிலை (Statue of Wisdom) என சிறப்பிக்கும் பலகை யையும் முதல்வர் திறந்து வைத் தார். அதன்முன்பு முதல்வர் தனது குடும்பத்துடனும் அமைச்சர்களு டனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் திருவள்ளுர் சிலையின் பாதங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள் க. துரைமுருகன், எ.வ. வேலு, ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.கே. சேகர் பாபு. கீதா ஜீவன்,  மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிர மணியன், நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கனிமொழி கருணாநிதி, டி.ஆர். பாலு, ஆ. ராசா உள்ளிட் டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வாழ்த்திய வான்மழை

தொடர்ந்து, திருக்குறள் நெறி பரப்பும் 25 தகைசான்மை யாளர்களுக்கு சிலையின் பீடத்தில் வைத்து பரிசுகளையும் முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார்.  இவ்விழாவின்போது, வள்ளுவர் சிலையிலிருந்து முதல்வர் புறப்படும் முன்பாக சுமார் பத்து நிமிடம் அடைமழை பெய்தது. வான்மழையும் பொழி ந்து வள்ளுவம் போற்றியது.