tamilnadu

img

இந்திய மாணவர் சங்க ஊழியர் தீரஜ் படுகொலை

இடுக்கி, ஜன.11- இடுக்கி பைனாவு பொறியியல் கல்லூரியில் இந்திய  மாணவர் சங்க ஊழியர் தீரஜ்ஜை, கேஎஸ்யு-இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். கண்ணூர், தளிபரம்பைச் சேர்ந்தவர் கணினி அறி வியல் மற்றும் பொறியியல் ஏழாவது செமஸ்டர் மாணவர் ஆர்.தீரஜ். இவரை, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புள்ள இளைஞர் காங்கிரஸை சேர்ந்த நிகில் பெய்லி, தீரஜை கத்தியால் குத்தியதாக அந்த இடத்தில் இருந்த மாணவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலைக்குப் பின்னால் சதி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் சி.வி.வர்கீஸ், மாநில செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எம்.மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். கல்லூரி தேர்தல் தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தினரை எதிர்கொள்ள வெளியில்  இருந்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டது. தீரஜ் மார்பில் குத்தப்பட்டார். சிறிது நேரத்திலேயே நிகில்  பைல் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தீரஜ் மற்றும் காயமடைந்த மாணவர்களை, அருகிலுள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கே.ஜி.சத்யன், வாகனத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கே.ஜி.சத்யனும், நிகில் பைல்  ஓடுவதை பார்த்ததாக கூறினார்.

முதல்வர் கண்டனம்

இடுக்கி பைனாவு அரசு பொறியியல் கல்லூரி மாணவரும், இந்திய மாணவர் சங்க செயல்பாட்டாளரு மான தீரஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமும், கண்டனத்துக்கும் உரியது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். “கல்லூரிகளில் கல வரத்தை உருவாக்கும் முயற்சியை எந்த சூழ்நிலை யிலும் அனுமதிக்க முடியாது. தீரஜ் கொலையாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என முதல்வர் தெரிவித்தார். தீரஜ்ஜின் குடும்ப உறுப்பினர்கள், கல்லூரி தோழர்கள் மற்றும் நண்பர்களுக்கு முதல்வர் தனது இரங்கலையும் தெரிவித்தார்.

நிகில் பைலி கைது

இதனிடையே, இடுக்கி பைனாவு பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க ஊழியர் தீரஜ்ஜை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில், இளைஞர் காங்கிரஸ் வாழத்தோப்பு தொகுதி தலைவர் நிகில் பைலி கைது செய்யப்பட்டார். காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர் நிகில் பைலி என்பது குறிப்பிடத்தக்கது.