சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப்பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, தொமுச பொதுச்செயலாளர் எம்.சண்முகம் எம்பி, பொருளாளர் நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.