சென்னை, பிப்.26- உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் நேரடி யாக வீடியோ கால் மூலம் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், அங்கிருந்து மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரு கிறது என்றும், இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் மாணவர்கள் இருக்க வேண்டுமென்றும் அறி வுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில் உயர் கல்வி பயில்வதற்காகச் சென்று தங்கியுள்ள தமிழக மாணவர் களை விரைந்து மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஏற்கெனவே கடி தம் மூலம் வேண்டுகோள் விடுத் திருந்தார். இந்நிலையில், அங்கு நிலவி வரும் போர்ச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உடனடியாக தாய கம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களும் தமிழகத்தில் வாழும் அவர்களின் பெற்றோர்க ளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கும், அவ்வாறு உடனடியாக அழைத்து வருவ தற்கான பயணச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது.
மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்பு கொள்வதற்கு உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறை யில் இதற்கென தனி குழு ஏற்படுத் தப்பட்டு, வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர் தலைமையில் குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள தமிழ கத்தைச் சேர்ந்த மருத்துவ மாண வர்களான ஈரோடு மாவட்டத் தைச் சேர்ந்த மவுனி சுஜிதா, திருச்சியை சேர்ந்த ஆண்டனி, தூத்துக்குடி நவநீதஸ்ரீராம் ஆகி யோரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோ கால் வாயிலாகத் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர்களை மீட்பதற்கு தேவை யான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமா கவும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுத்துறைச் செயலாளர் டி. ஜகந்நாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணை யர் ஜெசிந்தா லாசரஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனி ருந்தனர்.