சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாதவரம் ரவுண்டானா அருகே புதிய கிளை துவக்க விழா தலைவர் கே.சி.ஏ.கருத்திமான் தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் ஏற்றினார். வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.கமலநாதன் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் நகர விற்பனைக் குழு உறுப்பினர் ஜி.மோனிஷா, குடியிருப்போர் கூட்டமைப்பு பொருளாளர் ஆர்.பொன்னுசாமி, சரவணன் (கட்டுமான சங்கம்) கார்த்திக் (வாலிபர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.