3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, நவ. 10 - தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை (நவ.11) முதல் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங் களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச் சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதி கள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதி கள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட் டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது.
