tamilnadu

தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது!

உயர்நீதிமன்றம் உத்தரவு

 சென்னை,அக்.23- தேர்வு எழுதாமல்  மாண வர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா தொற்று பர வலால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.  பள்ளி, கல்லூரி களில் தேர்வு நடத்தப்படாம லேயே தேர்ச்சி அறிவிக்கப் பட்டது. அதுபோல, பொறியி யல், கலை கல்லூரி  அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக  அதிமுகஅரசு அறிவிப்பு வெளியிட்டு பின்னர் அரசாணை பிறப் பிக்கப்பட்டது. அதன்படி அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்பட்டது. இதனை  எதிர்த்து,  திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர்  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி  ஆகியோர் அரியர் தேர்ச்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசார ணை பல கட்டமாக நடை பெற்றது. அக்டோபர் 23 அன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேச வலு அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப் போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணைத் தேர்வுகள் நடத் தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அர சாணையை அமல்படுத்த வில்லை என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். இறுதி பருவத் தேர்வு களையும், இடைப்பட்ட பரு வத் தேர்வுகளையும் நடத்த  வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு விதி களை வகுத்துள்ளதாக பல் கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்வு எழுதா மல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும்  அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தமிழகஅரசின் அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்பதால், அந்த அரசாணை  ரத்து செய்யப்படுவதாகவும், அது செல்லாது என்றும் உத்தரவிட்டனர்.  இந்த வழக்கில் மேற் கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

;