சென்னை, ஜன. 30- பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுக்கொள்ள வழி வகை செய்யும் அரசாணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், “2021-2022ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக் ்கையின் போது கல்வித்துறை அமைச்சரால் ஏனையவற்றுடன் வரிசை எண் 18இல் மின் னணு சேவைகள் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப் ்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற் ்கான சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்று களும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரய மின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல் படுத்தப்படும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப் ்பினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல், புலப்பெயர்வு சான்றிதழ், கல்வி இணைச் சான்றிதழ், தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் போன்ற பல் வேறு வகையான சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களின் வாயிலாக மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின் ்றனர். இச்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும், மாணவர்கள். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங் ்களுக்கு நேரில் சென்று பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு காலவிரயம் மற்றும் பணவிரயம் ஏற்படு வதுடன், அரசு அலுவலகங்களுக்கும் பணிச் சுமை கூடி வருகிறது. எனவே பள்ளிக் கல்வித் ்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்று க்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட் ்டுள்ளது.