tamilnadu

தலித் பக்தர்களை தாக்கும் தீட்சிதர்களை கைது செய்ய சிபிஐ வலியுறுத்தல்

சென்னை, பிப்.20- சிதம்பரம் நடராஜர் கோவிலில் தலித் பக்தர் களை தாக்கும் தீட்சிதர்களை காவல்துறையினர் கைது செய்யவேண்டும் என்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தலித் பக்தர்களை தாக்கும்  தீட்சிதர்களை கைது  செய்க! நடராஜர் திருக்கோ யிலை அரசு ஏற்க சட்டம் நிறை வேற்றுக! கடலூர் மாவட்டம்,  சிதம்பரம் நகரில் உள்ள  தில்லை நடராசர் திருக்கோ யில் தீட்சிதர்கள் பக்தர்க ளிடையே பாகுபாடு மற்றும் சாதி தீண்டாமை காட்டுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. வரலாற்று தொன்மையும், திராவிடக் கட்டிடக்கலையின் பெருமை யும் கொண்ட தில்லை நடரா சர் திருக்கோயில் நிர்வா கத்தை, தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்றி, இந்து சமய அறநிலையத் துறை நிர்வா கத்தின் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும்.

கடந்த 13.02.2022 சிதம் பரம் நடராசர் ஆலயத்திற்கு சென்ற  பட்டியலின பெண்  பக்கதர் ஜெயஷீலா என்ப வரை,  தீட்சிதர்கள் ஒரு குறிப் பிட்ட பகுதியில் தடுத்து,  அவ ரது சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தி, அவமதிக்கப் பட்டுள்ளார். மேலும் கோவி லுக்கு உள்ளே நிற்க விடா மல் தள்ளி வெளியேற்றி யுள்ளனர். இது தொடர்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொ டுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவு களில் வழக்கும் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. ஆனால், குற்றச் செயலில் ஈடுபட்ட வர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாமல் இருப்பது சரியல்ல, அவர் கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டனை பெறும் வகையில் வழக்கை நடத்த வேண்டும். அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகராக சட்டம் நிறை வேற்றி, அதன்படி அர்ச்சகர் கள் நியமனம் செய்து, சமூக நீதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தையும், அதன் உடைமைகளையும் கையகப்படுத்த தனி  சிறப்புச் சட்டம் நிறை வேற்றி, அதன் முழு நிர்வாகத் தையும் இந்து சமய அறநிலையத் துறை யின் கீழ் கொண்டு வர  வேண்டும். இங்கு பணிபுரி யும் தீட்சிதர்களுக்கு ஊதி யம் நிர்ணயித்து வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக் கையில் அவர் கூறியுள்ளார்.