போர்ட்பிளேர் மார்ச் 3- யூனியன் பிரதேசமான அந்தமான் & நிக்கோபார் தீவு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அதிகரித்து வருவதால் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறைக்கு பெரார்கஞ்ச் பொதுக்கூட்டத்தில் அந்தமான் மாநில செயலாளர் டி.அய்யப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு அந்தமான் பெரார்கஞ்ச் சந்திப்பு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்கூட்டத் தில் டி.அய்யப்பன் பேசியதாவது, “அந்தமான் தீவுகளில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு அதி கரிப்பு குறித்து ஊடகங்கள் பல்வேறு நிகழ்வுகளை அம்பலப்படுத்திய பொழுதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரி களால் போதைப்பொருள் கடத்தல், விநியோகத்தை கட்டுப்படுத்த முடியா மல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக இளைய தலை முறையினரை குறிவைத்து போதைப் பொருள் விநியோகம் செய்வதற் காகவே சமூக விரோதிகளால் தீவு களுக்கு போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்தமான் தீவுகளில் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய பயனுள்ள நடவடிக்கை களை எடுக்க வேண்டும் எனவும்,
போதைப்பொருள் சட்டவிரோத செயலில் சகல நபர்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டு மெனவும்” அந்தமான் காவல்துறை க்கு டி.அய்யப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். சிபிஐ(எம்) தெற்கு அந்தமான் செயலாளர் டாக்டர் கவுரங்கா மாஜி, நாட்டில் ஒன்றிய அரசு பின்பற்றி விவ சாயிகளுக்கு எதிரான கொள்கை களை விரிவாக விளக்கி, ஒன்றிய அர சாங்கத்தின் தவறான கொள்கை களால் அந்தமான் தீவுகளில் உள்ள விவசாயிகளும் பல்வேறு பிரச்சனை களை எதிர்நோக்கி வருவதாகவும், கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சி யில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் மறுக்கப்படுவதாகவும்” பொதுக்கூட்டத்தில் குற்றச்சாட்டினார். “அந்தமான் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான பலன்களை ஒன்றிய அரசும், யூனியன் நிர்வாகமும் மறுப்பதாக” சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பி.கலைராஜன் பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டினார். போர்ட் பிளேயர் பகுதிக் குழு உறுப்பினரான என்.கே.பி. நாயர் பாஜக ஆட்சியின் போது தீவு களில் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்களை சுருக்கமாக விளக்கினார். சிபிஐ(எம்) தெற்கு அந்த மான் கிராமப் பகுதிக் குழு உறுப்பினர் எஸ்.சிதம்பரம் பெரார்கஞ்ச் பொதுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.