tamilnadu

img

2027-இல் மக்கள் தொகையுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

2027-இல் மக்கள் தொகையுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றிய அரசு தகவல்

புதுதில்லி, ஜூன் 4 - 2027-ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பனிப் பிரதேசங்களான இமாச்சல், உத்தரகண்ட் மாநிலங்கள் மற்றும் ஜம்மு  - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் 2026 அக்டோபர் 1 முதலே மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011-இல் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. ஆனால், அதன் விவரங்களை 2014-இல் ஆட்சிக்கு நரேந்திர மோடி அரசு வெளியிடவில்லை.  அத்துடன், 2021-இல்  நடத்த வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப் பிற்குப் பதிலாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய வற்றைத் தயாரிக்கும் பணி களில் ஈடுபட்டது. 2021  மக்கள்தொகை கணக் கெடுப்புப் பணிகளை ரூ. 8,754 கோடி செலவில் மேற் கொள்வதற்கும், தேசிய மக்கள் பதிவேட்டை ரூ.3,941  கோடி செலவில் புதுப்பிக்கவும் தீர்மானித் தது. முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களா க்கும் முயற்சியாக இந்த வேலைகளைத் துவங்கி யது. இதற்கு நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் வெடித்தன. அத்துடன் கொரோனா காரணமாக மோடி அரசின் என்பிஆர், என்ஆர்சி நடைமுறைகள் தள்ளிப்போயின.  இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தி லிருந்து ஒவ்வொரு பத்தா ண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப் பையே முதன்முறையாக மோடி அரசு நிறுத்தி வைத்தது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வில்லை. இதற்கு கடும் கண்ட னங்கள் எழுந்த பின்னணி யில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பீகார் தேர்தல்  ஆதாயத்திற்காக இந்த நட வடிக்கையை மேற்கொண் டது. இந்நிலையிலேயே, 2027-ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.