tamilnadu

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு

சென்னை,மார்ச்.1 அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவள்ளூரை அடுத்த டோல்கேட் பகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, பெஞ்சமின், அப்துல் ரஹீம், மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்.பி.க்கள் மருத்துவர் வேணு கோபால், திருத்தணி கோ.அரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பி.பலராமன், அலெக்சாண்டர் உள்ளிட்ட 200 பெண்கள், 500 ஆண்கள் என அதிமுக நிர்வாகிகள் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன், ஏ.கே. செல்வராஜ், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 பேர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.