சென்னை, மே 30- ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நாட்டில் மநுவாதம் ஆட்சி செய்வது கொடுமையா னது என்றும் மநுவாதத்தை ஏற்றுக் கொண்ட வர்கள்தான் ஒன்றியத்திலும் உத்தரப்பிரதே சத்திலும் ஹரியானாவிலும் ஆட்சி செய்கி றார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் சுபாஷினி அலி குற்றம்சாட்டினார். சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றக்கோரி சென்னை சைதாப்பேட்டையில் சனிக்கிழமை (மே 28) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: அனைத்தையும் சாதியக் கண்ணோட் டத்தோடு பார்ப்பவர்கள் கலப்புத் திரும ணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நமது நாட்டின் அரசியல் சாசனத்தை உரு வாக்கிய டாக்டர் அம்பேத்கர், “பருவ வயதை எட்டிய ஆணோ பெண்ணோ அவர்கள் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொள்ளச் சட்டத்தில் இடம் உண்டு’’ என்று கூறினார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் கலப்புத் திருமணத்தை ஒருசிலர் ஏற்க மறுக்கி றார்கள்.
தற்போதைய ஆட்சியாளர்கள் அம்பேத் கர் சிறந்த தலைவர், அரசியல் சாசன சிற்பி என்றெல்லாம் அவரை புகழ்ந்துகொண்டே மறுபுறம் அவர் இயற்றிய அரசியல் சாச னத்தைக் காட்டிலும் மநுவாதத்திற்கு சேவகம் புரிபவர்களாக இருக்கிறார்கள். எனவேதான் கலப்புத் திருமணத்தை எதிர்க்கிறார்கள். திருமண வயதை உயர்த்த சட்டம் இயற்றவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.இதுபோன்ற நடவ டிக்கைகளால் பெண்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால் பரவாயில்லை என்று கூறுபவர்கள், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரைத் திருமணம் செய்தால் ஐய்யோ ராமா என்று கூச்சல் போடுகிறார்கள். திருமண வயது தொடர்பான சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பு 7வயதில் 9 வயதில் பெண்க ளைத் திருமணம் செய்த காலம் உண்டு. திருமணம் முடிந்தவுடன் பெண்களைப் படிக்க அனுப்பமாட்டார்கள், அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். ஆண்களால் வீட்டிலேயே அடக்கி வைக்கப் பட்டனர். வர்ணாசிரமம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் தொடர்வது வேதனையளிக்கிறது. சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக மாதர் சங்கம், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் போராடவேண்டுமோ? ஹரியானாவில் ஜாட் சமூகத்தினரின் காப் பஞ்சாயத்து என்ற சாதி பஞ்சாயத்திற்கு எதிராகவும் மாதர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. ஒரு பெண்ணோ ஆணோ ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டாலே அவர்களைக் கொன்று விடுவார்கள். குடும்பத்தைக் கிராமத்தை விட்டு ஒதுக்கி விடுவார்கள். கலப்புத் திருமண காதல் ஜோடிகள் காவல்நிலையம் சென்றா லும், நீதிமன்றம் சென்றாலும், அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைதான் அங்கு நிலவுகிறது.
காதலிக்க நேரமில்லை என்று படம் எடுத்த தமிழகத்தில் கலப்புத் திருமண காதல் ஜோடி உயிருக்கு உத்தரவாதம் இல்லை. குழந்தைகள் மீது பெற்றோர் அதிக அன்பு வைத்துள்ளார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ஆனால் அதே பெண் வேறு ஒரு சாதியை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணை கொலை செய்யவும் அதே பெற்றோர் தயங்குவதில்லை. எனவேதான் ஆணவப் படுகொலை க்கு எதிராக சட்டம் இயற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பெரியார் பிறந்த இந்த மண்ணில், சமூக நீதி நிலைநாட்டப் பட்ட இந்த மண்ணில் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டி யுள்ளது. இவ்வாறு சுபாஷினி அலி பேசினார்.
போராட்டம் ஓயாது
முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசியதன் சுருக்கம் வருமாறு: சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் கோரி 10வருடமாகப் போராடி வருகிறோம். இதற்கான சட்ட முன்வடிவை 2015ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அ.சவுந்தரராசன் கொண்டு வந்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி சாமியைச் சந்தித்து நேரடியாக வலியுறுத்தி னோம். இருப்பினும் சட்டம் வரவில்லை. கவுசல்யா-சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் கவுசல்யா இறந்திருந்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்க முடியாது. சூரக்கோட்டை முருகேசன் வழக்கில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மனித உரிமை ஆணையம் அறிவுறுத்திய பிறகே அபிராமிக்கு அரசு வேலை கிடைத்தது. இதுபோன்ற ஆணவப்படு கொலை வழக்குகளில் அரசிற்குப் பொறுப்பு இருக்க வேண்டாமா? ஒரு மாணவியின் ``ஹிஜாப்பை கழற்றச் சொன்னதற்காக, ஒட்டுமொத்த மாணவிக ளும் ``ஹிஜாப் அணிந்து வந்த பாரம்பரி யம் கொண்டது தமிழகம். இந்தியாவின் வரை படத்தை ஒப்பிட்டுப் பேசிய அம்பேத்கர், வட இந்தியாவின் பரப்பளவைப் போன்று தென்னிந்தியா பகுத்தறிவில் விரிந்து கிடக்கிறது என்றார். அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும். சாதியத்தையும், சாதிய உணர்வுகளையும் தகர்ப்போம். ஆண வப் படுகொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் இயற்றும் வரை ஓய மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமை தாங்கினார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், முன்னணியின் பொருளாளர் இ.மோகனா, வாலிபர் சங்க மாநிலத் தலை வர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ். பாலா, முன்னணியின் நிர்வாகிகள் வி.ஜானகி ராமன் (வடசென்னை), கே.மணிகண்டன், பி.ஆர்.முரளி (தென்சென்னை), பி.சுந்தரம் (மத்திய சென்னை), கே.வாசுதேவன் (செங்கல்பட்டு), டி.கன்னியப்பன் (திரு வள்ளூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.