tamilnadu

img

சு.வெங்கடேசனை ஆதரித்துப் பிரச்சாரம்

மதுரை, ஏப்.8-

திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஜீவாநகரில் பிரச்சாரம் நடைபெற்றது. 92 ஆவது வட்ட திமுக வட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் மு.முகமதுஷெரீப் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எம்.ஜெயராமன், ஜீவாநகர் பகுதி திமுக செயலாளர் ஏ.கே.முருகானந்தம், ஏ.எஸ்.சுதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெய்ஹிந்த்புரம் பகுதி குழுச் செயலாளர் ஏ.எஸ்.செந்தில்குமார், டி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா.கணேசன், மதிமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சி.சங்கையா, யு.ஆறுமுகம், பழனி, ஏ.பி.சொக்கலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர். 100 ஆவது வார்டு பைகாராவில் சசிகுமார் (திமுக) தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் துரைப் பாண்டி (மதிமுக), ராஜேஷ்வரன், கண்ணன் (சிபிஐ), விஜயன்(காங்கிரஸ்), மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா.கணேசன், பகுதிக்குழு செயலாளர் இளங்கோ ராமமூர்த்தி, சிவநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கிழக்குத் தொகுதி

ஆண்டார்கொட்டாரம், சக்கிமங்கலம், அங்காடிமங்கலம், குன்னத்தூர், கார்சேரி, இளமனூர், வரிச்சியூர், ராஜாக்கூர், புதுத்தாமரைபட்டி, திருமோகூர், யா.ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்,வீ.அமிர்தலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், மாநிலக் குழு உறுப்பினர் சண்முகராஜ், ஆட்டோ ஓட்டுனர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் நெல்லை இரா.முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், மச்சராஜா, பாண்டி, நல்.மூர்த்தி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

;