சென்னை, ஏப். 3 - மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு கருத்தரங்கில் பங்கேற்க வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்கள் அழைப்பு விடுத் தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு ஏப். 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கேரள மாநி லம், கண்ணூரில் நடைபெறு கிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஏப்.9 அன்று மத்திய மாநில உறவுகள், மாநில உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறு கிறது.
இந்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பின ராயி விஜயனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் உரையாற்றுகின்றனர். இந்நிகழ்விற்கான அழைப்பிதழை ஞாயிறன்று (ஏப்.3) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வரவேற்புக்குழு சார்பில் கேரள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை மற்றும் தேவசம்போர்டு துறை அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். இதன்பின் செய்தியா ளர்களிடம் பேசிய கே.பால கிருஷ்ணன், “பாஜக-வை வீழ்த்த மேற்கொள்ள வேண்டிய உத்திகள் உள்ளிட்ட பிரச்சனைகள், ஒன்றிய பாஜக அரசின் மோச மான கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் கட்சிகளிடையே மக த்தான ஒற்றுமையை உரு வாக்குவது தொடர்பாக அகில இந்திய மாநாடு விவாதிக்க உள்ளது. மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறித்து வருவது குறித்து தேசிய அளவில் விவாதமாக மாறி உள்ளது.
இந்தச் சூழலில், 9ந் தேதி மத்திய மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறு கிறது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் உரையாற்றுகிறார். கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் நேரடியாக பங்கேற்க மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் அழைப்பிதழை வழங்கினார். முதலமைச் சரும் கருத்தரங்கில் நேரடி யாக பங்கேற்பதாக தெரி வித்துள்ளார். மாநில உரிமை பறிப்பு கள், ஜம்மு காஷ்மீரை மாநி லத்தை பிரித்தது, ஆளு நர்களை பயன்படுத்தி மாநில அரசுகளை முடக்குவது போன்ற செயல்களில் ஒன்றிய பாஜக ஈடுபட்டு வரு கிறது. இதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதை வரை யறுக்கிற மத்திய மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகிற வகை யில் அந்த கருத்தரங்கம் அமைய உள்ளது” என்றார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச் செயலா ளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன், மூத்த நிர்வாகிகள் க.பொன்முடி, சி.வி.கணேசன் ஆகியோர் உடனி ருந்தனர்.