tamilnadu

பா.ஜ.க பெண் நிர்வாகி தலை துண்டித்துக் கொலை

பா.ஜ.க பெண் நிர்வாகி தலை துண்டித்துக் கொலை

2 ஆவது கணவர், மகன் உட்பட 4 பேர் கைது

தஞ்சாவூர், மே 7 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் சந்தை பகுதி யைச் சேர்ந்த பாலன் (45) மதுரை மேலூர் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது, உதயசூரியபுரத்தில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் என்ற கடைகளை நடத்தி வரு கிறார். பாலன் பா.ஜ.க, பொருளாதாரப் பிரிவு  மாநிலச் செயலாளராக பதவி வகித்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு ராஜி என்பவரை பாலன் திருமணம் செய்துள்ளார். பால னுக்கு கபிலன் (20) என்ற மகனும், ஒரு மக ளும் உள்ளனர். இந்நிலையில், பட்டுக்கோட்டை அருகே  கொண்டிக்குளம் சர்க்கார் தோப்பு பகுதி யைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகள் சரண்யாவுக்கு (38), மதுரை செல்லூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் திரு மணமான நிலையில், மதுரையில் வசித்து  வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு சண்முக சுந்தரம் இறந்துவிட்டார். அதன்பிறகு பால னுடன், சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பாலன், சரண்யாவை இரண்டாவதாக திரு மணம் செய்து கொண்டார்.  சரண்யாவிற்கு, சாமுவேல் (15), சரவ ணன் (13) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.  பாலன், சரண்யாவிற்கு, பா.ஜ.க மகளிரணி யில் பொறுப்பு வாங்கிக் கொடுத்தார். இதை யடுத்து மதுரையில் ஏற்பட்ட பிரச்சனையால் சரண்யா தனது மகன்களுடன், பாலனுடன் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, உதய சூரியபுரத்தில் வாடகை வீடு ஒன்றில் வசித்து  வந்தார்.  இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு, பாலன் மற்றும் சரண்யா வின் மகன்கள் கடைகளை பூட்டி விட்டு பைக்கில் வீட்டிற்குச் சென்று விட்டனர். சரண்யா கடைத்தெருவில் பால் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண் டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்து கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டி துண்டித்து விட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றனர்.  கொலை நடந்த இடத்தில் நள்ளிரவு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர்  இரா.இராஜாராம் விசாரணை நடத்தினார்.  இது குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிந்து, குற்றவாளி களை தேடி வந்தனர். இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை காலை பாலனின் முதல் மனைவி ராஜியின்  மகனான மேலூரைச் சேர்ந்த கபிலன் (19),  அவரது நண்பரான குகன் (24) மற்றும் கொண்டிக்குளம் சர்க்கார்தோப்பு பகுதி யைச் சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய மூவ ரும், மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 6-இல் ஆஜராக முயன்றனர். அவர்கள்  நீதிபதி உத்தரவின் பேரில், மதுரை அண்ணா  நகர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வாட்டாத் திக்கோட்டை காவல்துறையினர் அவர்களை  அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாலன் சுமார்  43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இடம் ஒன்றை  வாங்கி தனது முதல் மனைவி மகனான கபிலன் பெயரில் பத்திரப் பதிவு செய்து  கொடுத்துள்ளார். இதுகுறித்து சரண்யா வுக்கு தெரியவர, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே பாலன் கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு, மகன் கபிலன்,  அவரது நண்பரான குகன் ஆகிய இருவரை யும், தனது கடையில் வேலை செய்யும் பெண்ணின் கணவரான பார்த்திபன் வீட்டில் தங்க வைத்து சரண்யாவை கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கு கார ணமான பாலனை காவல்துறையினர் கைது  செய்து விசாரித்து வருகின்றனர்.  இறந்த சரண்யா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப் பிடத்தக்கது.