tamilnadu

img

வேலை வாங்கித்தருவதாக பணமோசடி: பாஜக விருதுநகர் மாவட்டத் தலைவர் கைது

சிவகாசி, மே 16- வேலை வாங்கித் தருவதாக தனது சொந்தக் கட்சிக்காரரிடமே ரூ.11 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்  சுரேஷ்குமார்.இவர், விருது நகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆவார். மாவட்டச் செயலாளராக இருந்தவர்  கலையரசன். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியன் என்ப வரிடம், அவரது மகன்களான கார்த்திக்  என்பவருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், முருகதாஸ் என்பவ ருக்கு தென்னக ரயில்வேயிலும் வேலை  வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.11 லட்சத்தை பெற்றுள்ளனர்.   ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராம லும் இருந்து வந்துள்ளனர். பாண்டியன் தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளார். இதையடுத்து,  ரூ.2 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகை ரூ. 9 லட்சத்தை  திருப்பிக்கொடுக்கவில்லை. எனவே பாண்டியன் இதுகுறித்து, விருதுநகர்  மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த 2022  டிசம்பரில் மாவட்டச் செயலாளர் கலை யரசனை கைது செய்தனர். இந்நிலை யில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமறைவானார்.   பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். இதையடுத்து, மே 12 ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவரின் ரூ. 9 லட்சம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், சுரேஷ்குமார் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி பணத்தை ஒப்படைக்கவில்லை. இதனால்  ஜாமீன் ரத்தானது. இந்தநிலையில் திருத்தங் கல் பாண்டியன் நகரில் இருந்த பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.