லக்னோ, ஆக.23- ஐசியு-வில் காலணி அணியக் கூடாது என்று தெரிவித்த தனியார் மருத்துவ மனையை இடிக்க புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார் லக்னோ பாஜக மேயர். பாஜக ஆளும் உத்தரப்பிரதேச தலை நகர் லக்னோவுக்கு அருகே தானா பிஜ்னூ ரில் உள்ளது விநாயக் மெடிகேர் மருத்துவமனை. இந்த மருத்துவமனை யின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுரேன் குமாரைக் காண லக்னோ நகர மேயர் சுஷ்மா காரக்வால் சென்றுள்ளார். மேயர் சுஷ்மா காரக்வால் ஐசியு அறைக்குள் காலணி அணிந்து சென்றுள் ளார். மருத்துவ விதிகளின்படி ஐசியு அறைக்குள் காலணி அணிந்து செல்லக் கூடாது என மருத்துவமனை நிர்வாகத்தி னர் தெரிவித்துள்ளனர். காலணி அணிந்து தான் செல்வேன் என சுஷ்மா காரக்வால் மருத்துவமனை நிர்வாகத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மருத்துவமனையில் இருந்து கிளம்பிச் சென்ற சுஷ்மா காரக்வால், விநாயக் மெடி கேர் தனியார் மருத்துவமனை மீது புல்டோ சர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநக ராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளார். அதன் பிறகு மருத்துவமனை நிர்வாகம், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் மருத்துவமனை தப்பியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சிறிய பிரச்சனைக்கு ஒரு பெரிய மருத்துவமனையை புல்டோசர் மூலம் இடிக்க உத்தரவிட்ட பாஜக மேயருக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.