லடாக், அக். 9 - லடாக் தன்னாட்சி மலை மேம்பா ட்டுக் கவுன்சில் - கார்கில் தேர்தலில், பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 26 இடங்களில் வெறும் 2 இடங்கள் மட்டுமே பாஜக-வுக்கு கிடைத்துள்ளது. தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி 22 இடங்களிலும், சுயேட்சை கள் 2 இடங்களில் வாகை சூடியுள்ள னர். தேசிய மாநாட்டின் பெரோஸ் அஹ்மத் கான் தலைமையிலான லடாக்கின் தற்போதைய கவுன்சில் அதன் ஐந்தாண்டு பதவிக்காலத்தை அக்டோபர் 1 அன்று நிறைவு செய்தது. அதைத்தொடர்ந்து, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் - கார்கில் தேர்தல் அண்மையில் அறிவிக்கப் பட்டது. 30 உறுப்பினர்களைக் கொண்ட லடாக் மலை மேம்பாட்டுக் கவுன்சில் - கார்கிலில், நான்கு நியமன உறுப்பினர் களுக்கான இடங்கள் போக, மீத முள்ள 26 இடங்களுக்கு அக்டோபர் 4 அன்று தேர்தல் நடைபெற்றது.
பாஜக 17 இடங்களில் வேட்பா ளர்களைக் களமிறக்கியது. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டாலும், பாஜக வலுவாக இருக்கும் இடங் களில் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடு த்து, ஒரு கட்சியை மற்றொரு கட்சி ஆதரித்தது. தேசிய மாநாட்டுக் கட்சி 17 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. இதனால் பல தொகுதி களில் மும்முனைப் போட்டி நிலவி யது. இவர்கள் தவிர, ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 25 இடங்களிலும் போட்டியிட்டனர். கடந்த அக்டோபர் 4 அன்று, மாவட்டம் முழுவதும் 278 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடை பெற்றது. முதன்முறையாக மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதில், 77.61 சதவிகித வாக்குகள் பதி வாகின. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 388 என்ற நிலையில், அவர்களில் 74 ஆயிரத்து 026 பேர் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் ஞாயிறன்று எண்ணப்பட்டன. இதில் தேர்தல் நடைபெற்ற 26 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி 12 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக - சுயேட்சைகள் தலா 2 இடங்களை யும் வென்றனர். தேர்தல் நடைபெற்ற 26 இடங்களில் 22 இடங்களை வென்றதன் மூலம், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் - கார்கிலை, தேசிய மாநா ட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக-வுக்கு ஒரு இடமே இங்கு கிடைத்திருந்தது. பின்னர், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) 2 கவுன்சிலர்களை வளைத்துப் போட்டதன் மூலம் தனது கவுன்சிலர்களின் எண்ணிக்கையை 3 ஆக பாஜக உயர்த்திக் கொண்டது. ஆனால், சட்டப்பிரிவு 370 ரத்து, ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிப்பு போன்ற நட வடிக்கைகளின் பின்னணியில் முதன் முறையாக இந்த தேர்தல் நடை பெற்றும், பாஜக-வால் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற முடிந்துள் ளது குறிப்பிடத்தக்கது. “ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டோம் எனும் பாஜக-வின் பொய்ப் பிரச்சாரத்துக்கு மக்கள் சாவு மணி அடித்துள்ளனர்!
வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். “லடாக் மலைமேம்பாட்டுக் கவுன்சில் - கார்கில் தேர்தல் வெற்றி யை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலத்தை அதன் மக்களின் அனுமதியின்றி, ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவும் பிளவுபடுத்திய அனைத்து சக்தி களுக்கும், கட்சிகளுக்கும் இந்த தேர்தல் முடிவு ஒரு செய்தியைத் தரும்” என்று தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லடாக் மலைமேம்பாட்டுக் கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கட்சிகளின் சிறப்பான வெற்றியானது, வளர்ச்சி என்ற கதையை சொல்லி, 370-ஆவது பிரி வை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீர் மாநி லத்தைப் பிரித்த பாஜக-வின் தவ றான செயல்பாடுகளை அம்பலப் படுத்தி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகம்மது யூசுப் தாரிகாமி கூறியுள்ளார். லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் - கார்கில் முடிவு, ‘இந்தியா’வுக்கு மகத்தான வெற்றி. பாஜக-வுக்கு ஒரு மோசமான தோல்வி. பிரிவு 370-ஐ திரும்பப்பெற்ற, பாஜக-வின் தவறான செயல்திட்ட த்தை மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ள னர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.