துப்பாக்கி முனையில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் மும்பையில் பதுங்கிய பாஜக பிரமுகர் கைது
மும்பையில் பதுங்கிய பாஜக பிரமுகர் கைது
தென்காசி, ஜூன் 7 - தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதி யில் நண்பரின் 15 வயது மகளை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில், மும்பையில் பதுங்கியிருந்த பாஜக பிரமுகர் நீலகண்டனை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவ னத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் சுரண்டையைச் சேர்ந்த நீலகண்டன் (58), தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பி னராகவும் உள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த குடும்ப நண்பர் வீட்டிற்குச் சென்றார். அப்போது நண்பரின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. நீலகண்டன், இதை பயன்படுத்திக் கொண்டு அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வும் கூறப்படுகிறது. எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். வழக்கு பதியாத காவல்துறை இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி யின் பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்துறையினர், பாஜக நீல கண்டன் அப்பகுதியில் செல் வாக்குமிக்கவர் என்பதால் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தென்காசி மாவட்ட கண்காணிப்பா ளரிடம் புகார் மனு அளித்தனர். அதன் பின்னரும் வழக்குப் பதிவு செய்யப்பட வில்லை. எனவே சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அவரது மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி, உடனடியாக நீலகண்டன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தர விட்டார். நீதிபதி உத்தரவின்படி மே 17 ஆம் தேதி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்துறையினர், நீல கண்டன் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து, அவரைத் தேடினர். இதையறிந்த நீலகண்டன், போலீசாரிடம் சிக்காமல் இருக்க தலைமறைவாகி விட்டார். இதனால் போலீசார் நீலகண்டனை கைது செய்ய தனிப்படை அமைத்து, தமிழகம் முழு வதும் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி னர். ஆனால் நீலகண்டன் மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து, தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி யிருந்த பாஜக பிரமுகர் நீலகண்டனை கைது செய்து, தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். நீலகண்டனை 15 நாட்கள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நீல கண்டன் பாளையங்கோட்டை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.