tamilnadu

img

வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கும் பாஜக

வேளாண் துறையை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கும் பாஜக

வி.தொ.ச. மாநிலக் குழு கூட்டத்தில் சிவதாசன் பேச்சு

நாகப்பட்டினம், மே 31 -  அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நாகப் பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாநிலத் தலைவரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினரு மான எம்.சின்னதுரை, மாநில  பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், நாகை மாவட்டச் செயலாளர்  எம்.முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அகில இந்திய இணைச் செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினரு மான டாக்டர் வி.சிவதாசன் பேசுகை யில், “விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை ஒன்றிய அரசு காலில் போட்டு  மிதித்து விட்டு வேளாண் துறையை கார்ப்பரேட் நிறுவன கும்பலிடம் ஒப்படைக்க முயற்சி செய்கிறது. 24 கோடி விவசாயத் தொழிலாளர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.  இடதுசாரிகளின் முன்முயற்சி யால் கொண்டு வரப்பட்ட இந்த முக்கிய திட்டத்தை, ஒன்றிய அரசு சீர்குலைக்க முயற்சி செய்கிறது. திட்டத்தின் பயனாளர்களை 12 கோடி யாக குறைத்து விட்டது. நான்கு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யா மல் ரூ.86 ஆயிரம் கோடி மட்டும்  நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தை  முடக்கி வருகிறது. வேலை செய்த தொழிலாளர்களை, சம்பள பாக்கி கேட்டு போராடும் நிலைக்கு ஒன்றிய  அரசு தள்ளி உள்ளது. நல்ல மனிதராக உள்ளார் நடிகர் கமல்ஹாசன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள் விக்கு, “நடிகர் கமல்ஹாசன் திரைத் துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்படு வதால் மக்களால் நேசிக்கப்படும் நல்ல மனிதராக உள்ளார். நடிகர் கமல் ஹாசனை எந்தவித புவி எல்லைகளுக் கும் கட்டுப்படுத்த முடியாது. ‘அன்பே  சிவம்’ திரைப்படத்தின் மூலம், இந்த  நாட்டின் இதயத்தில் தனது முத்தி ரையை பதித்தவர் கமல்ஹாசன்” என்று கூறினார். தீர்மானங்கள் இக்கூட்டத்தில், ஜூலை 9 ஆம்  தேதி நடைபெறுகிற வேலை நிறுத் தத்தை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் முழுமை யாக ஆதரித்து, அனைத்து பகுதி  மக்களிடம் கொண்டுசேர்த்து, வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்  செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், நூறு  நாள் வேலை திட்டத்தில் பணி யாற்றிய தொழிலாளிகளுக்கு உடன டியாக பாக்கியின்றி ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள தால் டெல்டா மாவட்டங்களில் உள்ள  அனைத்து ஆறு, கால்வாய், சிறு வாய்க் கால் உள்ளிட்டவற்றை தூர்வார  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பேரவை யில், “அகில இந்திய துணைத் தலை வர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலா ளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலத் தலை வர் எம்.சின்னதுரை, மாநிலக் குழு உறுப்பினர் ஏ.மீரா, மாவட்டத் தலை வர் ஏ.வேணு, மாவட்டப் பொருளா ளர் கே.செந்தில்குமார் உள்ளிட் டோர் உரையாற்றினர்.