tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் பாஜக

சமீபத்தில் நடைபெற்ற தில்லி சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை கைப் பற்றியது பாஜக. ஆட்சி அதிகாரத் தைப்  பெற்றவுடன் பாஜக, தில்லி மாநக ராட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களை விலைக்கு வாங்கும் வேலையை தொடங்கியுள்ளது. சனிக்கிழமை அன்று ஆம் ஆத்மி கட்சி யின் தற்போதைய கவுன்சிலர்களான அனிதா பசோயா (ஆண்ட்ரூஸ் கஞ்ச்), நிகில் சப்ரானா (ஹரி நகர்) மற்றும் தரம் வீர் (ஆர்.கே.புரம்) ஆகியோர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் இணைந்தனர்.  தில்லி மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்த லில் கவுன்சிலர்கள், ஏழு மக்களவை எம்.பி.,க்கள் (பாஜகவைச் சேர்ந்தவர்கள்), மூன்று மாநிலங்களவை எம்.பி.,க்கள் (ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்) மற்றும் தில்லியில் உள்ள 14 நியமன எம்எல்ஏக்கள் வாக்காளர்களாக உள்ள னர். மூன்று கவுன்சிலர்கள் இணைந்ததன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை, ஆம் ஆத்மி கட்சியை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியிடத்தில் ஊழியரை கண்டிப்பது கிரிமினல் குற்றமல்ல : உச்சநீதிமன்றம் உத்தரவு

தெலுங்கானா மாநிலம் செகந்திரா பாத்தில் உள்ளது தேசிய மன நல நிறுவனம் (NIMH). இந்த நிறுவ னத்தின்  நிர்வாக இயக்குநர் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக உதவிப்பேராசிரியர் ஒருவர் 2022ஆம் ஆண்டு குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”தலைமைப் பொறுப்பில் இருக் கும் ஒருவர், இளைய பொறுப்பில் உள்ள ஊழி யர்கள் தொழில்முறை கடமைகளை மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய  வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பா கும்.

அதனால் ஊழியர்களின் பணி மற்றும் செயல்திறனையும், பணியிடத்தில் நடக்கும் தவறான நடத்தைகளையும் கேள்வி கேட்காமல் இருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும். புகார்தாரர் மீது பல பணியிட ஒழுக்கமின்மை மற்றும் அலட்சியம் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில், இயக்குநர் ஒழுங்குமுறை பிரச்சனைகளைத் தீர்க்க அதிகாரம் கொண்டவர்.

இது நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். அதனால் இதை அவமானப்படுத்துவதாகக் கருத முடியாது” எனக் கூறி வழக்கை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.