ஈரோடு,பிப்.22- தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் பிப்.22 அன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களை திமுக தலைமையிலன கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப் பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டியே அதிமுக வெற்றி பெறமுடியவில்லை. அதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனி யாகத் தேர்தலை சந்தித்த பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்கூட வாங்க முடியாமல் படுதோல்வியடைந்து வருகின்ற னர். இந்நிலையில், ஈரோடு பவானி சாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படு தோல்வியடைந்துள்ளார். இவருக்கு பாஜகவினர் கூட ஒட்டுபோடவில்லை இதனால், மீண்டும் ஒத்த ஓட்டு பாஜக இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலி ன்போது கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.