tamilnadu

img

உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த சீராணம்பாளையம் தியாகி பழனிசாமி

தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைக்காக விடாப்பிடி யாக போராடி வரும் சிஐடியு சங்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் எதிரிகளால் வெட்டிப்  படுகொலை செய் யப்பட்டார் சீராணம்பாளையம் தியாகி பழனிசாமி. 1978 ஆம் ஆண்டு திருப்பூர் நகரம் மற்றும் அதன் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டத்தை நடத்தினர். அந்த போராட்டத்தின்போது திருப்பூர் நக ரப் பகுதியில் கூலி உயர்வு கோரிக்கைகளை விசைத் தறி உரிமையாளர் சங்கம் ஏற்றுக் கொண்டு உடன்பாடு காணப்பட்டது. ஆனால் மங்கலம் கிராமத்தை மைய மாகக் கொண்ட மேற்குப் பகுதி கிராமங்களில் உடன் பாடு ஏற்படவில்லை.  திருப்பூர் நகரப் பகுதியில் போராட்டம் வெற்றி பெற்று விசைத்தறிகள் இயங்கத் தொடங்கின. ஆனால் மேற்குப் பகுதி கிராமங்களில் உடன்பாடு ஏற் படாததால், சிஐடியு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் போராட்டத்தைத் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் சிஐடியு சங்கத்தின ருக்குத் தெரியாமல், விசைத்தறி உரிமையாளர் சங்கத் துடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டு  வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.

பெரும்பான்மை தொழிலாளர்கள் இதை ஏற்காத  நிலையில் மேற்குப் பகுதியில் வேலை நிறுத்தம் தொட ரும் என சிஐடியு அறிவித்தது. எனினும் அண்ணா தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தத்தை சீர் குலைக்கும் நோக்கில் விசைத்தறி உரிமையாளர் சங் கத்தினருடன் சேர்ந்து, விசைத்தறிகளை இயக்குவ தற்கு முயற்சித்தனர். கருங்காலிகளை வைத்து விசைத்தறிகளை இயக்குவதை சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அண்ணா தொழிற் சங்கத்தினரும், விசைத்தறி உரிமையாளர்களும் கை  கோர்த்துக் கொண்டு, சிஐடியு விசைத்தறி தொழிற்சங் கத்தின் முன்னணி களப் போராளிகளைக் குறி வைத்து தொடர் தாக்குதல் நடவடிக்கைகளை மேற் கொண்டனர். இதன் உச்சக்கட்டமாக இந்த வட்டா ரத்தில் 17 தோழர்களின் வீடுகளை இடித்து தகர்த்த னர்.

உடனடியாக சிஐடியு அறைகூவல் விடுத்து திருப்பூரின் அனைத்து பகுதி தொழிலாளர்களிடமும் நிதி திரட்டி அந்த வீடுகளுக்குரிய ஓடு, சவுக்கு மரம்  உள்ளிட்ட பொருட்களை கேரளாவில் இருந்து விலைக்கு வாங்கி வந்து வீடுகளைச் சீரமைத்துக் கொடுத்தது. அதிமுக ஆளும் கட்சியாக இருந்த நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில்தான், 1979ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இரவு சீராணம்பாளையம் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 10 பேர் அருகில் இருக்கும் மங்கலம் கிராமத்து தியேட்ட ரில், எம்ஜிஆர் நடித்த இதயக்கனி திரைப்படத்தின் இர வுக் காட்சிக்கு சென்று விட்டு நடு இரவில் வீடு திரும் பிக் கொண்டிருந்தனர். அப்போது கணபதிபாளை யம் - செட்டிப்பாளையம் இடையே மறைந்திருந்த குண்டர்கள் இவர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சீராணம் பாளையம் பழனிசாமிக்கு தலையிலும் உடலிலும் அரி வாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தார். இருளில் தாக்குதலில் இருந்து தப்பிச் சென்ற மற்றவர்கள் வீடு திரும்பிய பிறகுதான் பழனிசாமி யைக் காணவில்லை என்று தெரியவந்தது.

உடனடி யாக அனைவரும் திரண்டு அவர்கள் வந்தவழியில் திரும்பிச் சென்று பார்த்தபோது பழனிசாமி ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் கோவை செல்லும் வழியிலேயே ஜூன் 9ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தது. 17 வயது துடிப்பு மிக்க இளைஞரான தியாகி  பழனிசாமி பனியன் தொழிலாளியாக வேலை செய்து  வந்தவர். வாலிபர் சங்கத்திலும், தொழிற்சங்கத்தி லும் ஆர்வத்துடன் முன்னணியில் இருந்து செயல் பட்டவர். 1978, 79 விசைத்தறி போராட்டத்தின் காரண மாக சிஐடியு சங்கம் அந்த வட்டாரத் தொழிலாளர் கள், உழைக்கும் மக்களின் வலிமை மிக்க அமைப் பாக வளர்ந்திருந்தது.  விசைத்தறி தொழிலாளர்க ளின் உறுதிமிக்கப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஏற்கெனவே அதிமுக சங்கம் ஏற்படுத்திய ஒப்பந்தம் கைவிடப்பட்டது. நியாயமான கூலி உயர்வு புதிய ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்கள் போராடினால் தொழில் அழிந்துவிடும் என்று செய்த பொய்ப் பிரச்சாரம் எடு படவில்லை. மாறாக தொழிலாளர் உரிமைப் போராட் டத்துக்குப் பிறகுதான் திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் மேற்குப் பகுதி மட்டுமின்றி சுற்று வட்டாரங்களிலும் விசைத்தறி தொழில் வேகமாக வளர்ந்தது.

ஆனால் இப்போது விசைத்தறி தொழில் நிலை  கேள்விக்குறியாக மாறி வருகிறது. பல விசைத்தறியா ளர்கள் தங்களிடமுள்ள ஆயிரக்கணக்கான விசைத் தறிகளை பழைய இரும்புக் கடைக்கு விலைபேசி விற்று வருகின்றனர். தொழிலை நடத்த முடியாத அளவுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் கடும் நெருக்கடிக்கு தொழிலாளர்கள் காரணமல்ல, மாறாக ஒன்றிய அரசு பின்பற்றும் கொள்கைகள் காரணமாகத்தான் நூல்  விலை கடும் உயர்வு, உதிரி பாகங்கள் விலையேற்றம், ஜவுளி சந்தை சுருங்கி வருவது என கட்டுபடியாகாத நிலைக்கு விசைத்தறி தொழில் மாறி வருகிறது. இந்த சூழ்நிலையிலும் சிஐடியு தொழிற்சங்கத்தி னர் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை நடத்துவதுடன், இந்த தொழிலைப் பாதுகாக்கவும்  விசைத்தறி உரிமையாளர்களுடன் ஒன்றிய அரசின்  கொள்கைக்கு எதிராக, கரம் கோர்த்துப் போராடு கின்றனர். தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நல னைப் பாதுகாக்கவும் சீராணம்பாளையம் பழனிசாமி போன்ற எண்ணற்ற தியாகிகளின் ரத்தத்தில் சிவந்த செங்கொடி இயக்கம் சரியான நிலைப்பாட்டுடன் இயங்கி வருகிறது.