மினிமம் பேலன்ஸ் கொள்ளையை தீவிரப்படுத்தும் வங்கிகள்
2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சத் தொகை அதிகரிப்பு, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது என நிதித்துறை சார்ந்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே வங்கிகளும் தங்கள் பங்குக்கு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு, ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
அதன்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வங்கியில் கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்பாக (மினிமம் பேலன்ஸ்) ரூ.3,000 வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில், தற்போது ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியும், குறைந்தபட்ச கையிருப்பை ரூ.1,000-லிருந்து ரூ.3,500 ஆக அதிகரித்துள்ளது. கனரா வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையானது ரூ.1,000 ஆக இருந்து வந்த நிலையில், அது தற்போது ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற பொதுத்துறை வங்கிகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை தொடர்பாக தகவல் இன்னும் வெளியாகவில்லை.