புதுதில்லி, பிப்.8- வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, ஒன்றிய அமைச்சர் பகவத் கராத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது: முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வங்கி யூனியன்களிடமிருந்தும் பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. இது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று கூறினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய தனியார்மய மாக்கல் இலக்குகள் எதையும் கோடிட்டுக் காட்டவில்லை, ஏனெனில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பங்கு விற்பனை இலக்குகள் மட்டும் முடிக்கப்படும் என்றார்.