சென்னை, ஆக.10- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.12.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டிடங்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (ஆக. 10) திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 மாணவியர் தங் கும் வசதியுடன்,ரூ3 கோடியே 69 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத் தப்பட்டோர் நலக் கல் லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், கடலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத் தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவியர் விடுதிக் கட்டிடம், தூத்துக் குடி மாவட்டம், கோவில் பட்டியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம். தஞ்சாவூரில் 100 மாண வர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்; மதுரை மாவட்டம், மேலூ ரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத் தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம் என மொத்தம் ரூ.12 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.