புதுச்சேரி, அக்.2- ஆட்டோ தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதிக் கும் இ பைக், இரு சக்கர மோட்டார் வாடகை சே வையை தடை செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி ஊர்வலம்-ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சுற்றுலா நகரமாக திக ழும் புதுச்சேரியில் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆட்டோக் கள் இயங்கி வருகிறது. சுற்றுலா வாசிகளை நம்பியே உள்ள ஆட்டோ தொழிலா ளர்கள், தினந்தோறும் பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு இத்தொழி லைசெய்து வருகின்றனர்.இந்நிலையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இ பைக் வாடகை சேவையை புதுச்சேரியில் அறிமுகப் படுத்தி உள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக இரு சக்கர மோட்டார் வாகன வாடகை நிலையங்கள் செயல் பட்டு வருவதால், ஆட்டோ தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இ பைக் வாடகை சேவையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் இருசக்கர மோட் டார் வாகனங்களை பறி முதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியூசி, தொமுச, ஏடியூ உட்பட அனைத்து ஆட்டோ தொழிற் சங்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு ஒருங்கிணைப் பாளர்கள் மணவாளன், விஜயகுமார், அந்தோணி தாஸ், சேகர், பாப்புசாமி, கண்ணன், அற்புத நாதன், செந்தில், மணிவண்ணன், முருகன், சங்கர், சிவக்குமார், அன்பழகன், அய்யனார் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ், மாநில செயலாளர் சீனு வாசன், நிர்வாகிகள் ரவிச் சந்திரன் கொளஞ்சியப்பன், மதிவாணன் ஏஐடியுசி மாநில செயலாளர் சேது செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டு, ஆட்டோ தொழிலாளர் கள் காக்கி சட்டை அணிந்து இப்போராட்டத்தில் பங்கேற் றனர். முன்னதாக வேலை நிறுத்தம் செய்த ஆட்டோ தொழிலாளர்கள், மறை மலை அடிகள் சாலையில் இருந்து ஆட்டோக்களுடன் ஊர்வலமாக வந்து கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.