tamilnadu

img

ஆட்டோ செயலியை அரசே உருவாக்குக!

சென்னை, ஏப். 18 - தமிழக அரசே ஆட்டோ செயலி யை உருவாக்கி செயல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் 2013ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது பெட்ரோல் லிட்டர் 73 ரூபாய்க்கும், எரிவாயு 30 ரூபாய்க்கும் விற்பனை யான நிலையில், கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் என அரசு நிர்ணயம் செய்தது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கட்ட ணத்தை 3 மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதற்காக ஆட்டோக்களில் இலவசமாக ஜிபிஎஸ் மீட்டர் பொருத்தப்படும். கட்டுப்பாட்டு அறை அமைத்து அதன்மூலம் கட்டண உயர்வு தானியங்கி முறையில் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது.  அதன்படி, கடந்த 9 ஆண்டுகளாக கட்டணம்  உயர்த்தப்படவில்லை. ஆட்டோக் களில் ஜிபிஎஸ் மீட்டரும் பொருத்த வில்லை.

தற்போது பெட்ரோல் லிட்டர் 111 ரூபாய்க்கும், கேஸ் 74 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை  உயர்நீதிமன்றம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றி  அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆட்டோ மீட்டர் கட்ட ணத்தை உயர்த்தவும், அரசே ஆப்  தொடங்கி நடத்தவும் கோரி திங்க ளன்று (ஏப். 18) எழும்பூரில் ஆட்டோ  ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இந்தப் போராட்டத்தில் 500க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உயர்நீதிமன்ற உத்தர வுப்படி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் விலையோடு, வாடகை, கல்வி செலவு போன்றவற்றையும் இணை த்து கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அதை தொழிற்சங்கங்க ளோடு கலந்து பேசி செய்ய வேண்டும்” என்றார்.

“ஓலா, உபேர் போன்ற நிறு வனங்களால் ஆட்டோ ஓட்டுநர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். ஆட்டோக் களுக்கு முறையான கட்டணத்தை நிர்ணயித்து, ஆட்டோ செயலியை உருவாக்கி அரசு செயல்படுத்த வேண்டும். இதனை செய்தால் ஓட்டு நர்கள், பொதுமக்கள் என இருதரப் பினரும் பயனடைவார்கள். நகர்ப்புற  வாழ்விட மேம்பாட்டு வாரிய குடி யிருப்பில், 15 விழுக்காடு வீடுகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்றும் அவர் வலி யுறுத்தினார்.

பேச்சுவார்த்தை

இதனையொட்டி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு, உள்துறை செய லாளர் எஸ்.கே.பிரபாகரரை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்து பேசியது. அப்போது, “நீதிமன்ற உத்தரவையடுத்து மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ செயலி தொடங்குவது தொடர்பாக நலவாரியத்தில் வைத்து பரிசீல னைக்கு உட்படுத்தப்படும். மோட்டார் வாகன திருத்தச் சட்ட த்தின் படி அபராதத் தொகை வசூ லிப்பதிலிருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கப்படும்” என்று உள்துறை செயலாளர் உறுதி அளித்ததாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இந்தப்போராட்டத்தில் வி.குமார், எம்.சிவாஜி, உமாபதி, பிரபாகர், ஜெயகோபால் (சிஐடியு), ஐசிஎப் துரை, பழனி (எல்பிஎப்), மு.சம்பத் (ஏஐடியுசி), வேணுராம் (தேமுதொச), வை.குமார் (எம்எல் எப்) உள்ளிட்ட 15 தொழிற்சங்கங் களின் தலைவர்கள் பேசினர்.

தமிழகம் முழுவதும் முற்றுகை

ஒன்றிய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது, டீசல் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், ஆன்லைன் அபராத முறை கைவிட வேண்டும், நியாயமான மீட்டர் கட்டணத்தை தொழிற்சங்கங்களை அழைத்து பேசி நிர்ணயிக்க வேண்டும், ஆட்டோவிற்கு தனியான ஆப் உருவாக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கட்டுமான தொழி லாளர்களுக்கு வழங்குவதுபோல் 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) அறைகூவல் விடுத்தது.

கோவையில் கைது

இதனையேற்று, சென்னையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் முற்று கைப் போராட்டம் நடை பெற்றது. கோவையில் நடைபெற்ற  போராட்டத்தில் 38 தொழிலாளர் களை காவல்துறை கைது செய்துள் ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று சம்மேள னத்தின் தலைவர் வி.குமார், பொதுச் செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்  தெரி வித்துள்ளனர்.