விருதுநகர்,பிப்.7- அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி நான்கு வழிச்சாலையில் வாழ்வாங்கி கிராமத்தில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதனை அறிந்த கொள்ளை கும்பல் வங்கி யின் சுவரில் பெரிய துளையிட்டு வங்கிக்குள் நுழைந்த லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளது. ஆனால் முயற்சி பலனளிக்க வில்லை. இதனால், அதிலிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நகை, பணம் தப்பியது.