பள்ளிபாளையம் வேலுச்சாமி கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் முதன்மை குற்றவாளியான கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவரான சிவக்குமார், விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் மாவட்ட துணை அமைப்பாளராவார். இதேபோல், மற்றொரு குற்றவாளியான அன்பழகன் பாஜக நிர்வாகியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல், மார்ச் 14- பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் வேலுச்சாமி படுகொலை வழக்கில் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையத்தில் சிவக்குமார் என்பவர் கந்துவட்டி தொழில் நடத்தி வந்துள் ளார். இவரிடம் கடந்த 2010 ஆம் ஆண்டு பள்ளிப்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி யின் குடும்பத்தார் கடன் பெற்றுள்ள னர். இந்த கடனை திருப்பி கொடுக்க சிறிது தாமதமான நிலையில், கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த சிவக்குமார், அக்குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை கடத்திச் சென்று மிரட்டி பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். அதோடு தனது உதவியாளர் ஆமையன் என்பவரையும் வரவழைத்துள் ளார். அவரும், இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள் ளார். மேலும், இந்த பாலியல் வன்கொடுமைகள் அனைத்தை யும் வீடியோவாக பதிவு செய்து, இச்சம்பவத்தை வெளியில் கூறி னால் வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என அப்பெண்ணை சிவக்குமார் மிரட்டியுள்ளார். இதன்பின்னர் அடுத்த சில நாட்களில் அந்த வீடியோவை ஒரு ஆபாச வலைதளத்தில் வெளியிட்டு ள்ளனர். இதனைக் கண்டு பதறிய அந்த பெண்ணும், அவருடைய தாயாரும் என்ன செய்வது என்று தெரியாமல், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினுடைய அப்பகுதி கிளைச் செயலாளரான வேலுச் சாமியை சந்தித்து தங்களை காப்பாற்றும்படி கோரியுள்ளனர். இவர்கள் கூறிய தகவலை கேட்ட றிந்த தோழர் வேலுச்சாமியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாதிக்கப்பட்டவர் களை அழைத்துச் சென்று பள்ளிப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தனர். ஆனால், இப்புகாரின் மீது எவ்வித உருப்படி யான நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அதேநேரம், தன் மீது புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த சிவக்குமார், தனது அடியாட் களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்த தோழர் வேலுச்சாமியை படுகொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி தான் கொடுத்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய காவல்நிலையத் திற்கு சென்றுவிட்டு திரும்பிய வேலுச்சாமியை வழிமறித்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயு தங்களைக் கொண்டு கொடூரமாக வெட்டினர். இதில் தலை, மார்பு உட்பட உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்ட வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதன்பின் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவங்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி பலகட்ட போராட்டங்களை நடத்தி யது. இதன் விளைவாக, சிபிசிஐடி விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. மேலும், தோழர் வேலுச்சாமி கொலை வழக்கை விசாரணை செய்திட டி.ராஜன் விசாரணை அதிகாரியாக நிய மிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, கந்துவட்டி கும்பலின் தலைவன் சிவக்குமார் மற்றும் அவருடைய உதவியாளர் ஆமையன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் விசார ணை நடைபெற்றது. இந்த விசார ணையின் போது கந்துவட்டி கும்ப லைச் சேர்ந்தோர் தங்களது செல்வாக்கை பயன்படுத்தியும், சாட்சிகளை மிரட்டியும் பணிய வைத்து அராஜகத்தில் ஈடுபட்டதன் காரணமாக சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தாயார் கடைசி வரை உறுதியாக இருந்து தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். இந்நிலையில் சுமார் 12 ஆண்டுகள் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி சசிரேகா திங்களன்று தீர்ப்பளித்தார். இதில் குற்றவாளிகள் சிவக்குமார், ஆமை யன், மில்ட்ரி கணேசன், அருண் குமார், அன்பழகன், ராஜேந்திரன் ஆகிய 6 பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளிகளில் ஒருவரான ஆமையன் என்பவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். பூபதி என்ற குற்றவாளி தலைமறைவாக உள் ளார்.