தஞ்சாவூர், செப்.23 - பிரதம மந்திரியின் இன்றைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பய னும் இல்லை என்றார் விவசாயி கள் சங்க அகில இந்தியத் தலை வர் அசோக் தாவ்லே. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஞாயிற்றுக் கிழமை தஞ்சாவூர் சிட்டி மகாலில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் வரவேற்றார். இதில், விவசாயிகள் சங்க அகில இந்தியத் தலைவர் அசோக் தாவ்லே கலந்து கொண்டு பேசியதாவது: இன்று இந்தியா முழுவதும் வேளாண்துறை மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வரு கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்துறை கற்பனைக்கு எட்டாத வகையில் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண் டிருக்கிறது. கடந்த 25 ஆண்டு களில் மட்டும் இந்தியாவில் 3 மூன்று லட்சம் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு
பாஜக ஆட்சிப் பொறுப் பேற்ற கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், ஒரு லட்சம் விவசாயி கள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக இல்லை. இன்றைக்கு விதை, உரம், பூச்சி மருந்து, மின்சாரம், தண்ணீர் என அனைத்தின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் விவசாயி கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருளுக்கான விலை மட்டும் உயரவே இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை உண்மையிலேயே விவ சாயிகளுக்கு தரப்படுவதில்லை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான மாநி லங்களில் அவ்வாறு வழங்கப் படுவதில்லை. இன்றைக்கு டெல்டா மாவட்டங்களில் புயல், மழை, வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் விவ சாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை.
விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல்
பிரதம மந்திரி பெயரி லேயே பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளது. ஆனால் விவசாயி களுக்கு அந்தத் திட்டத்தால் எந்த பயனுமே கிடைக்க வில்லை. சில காப்பீட்டு கம்பெனி கள் உள்நாட்டு கம்பெனிகளாக வும், சில கம்பெனிகள் வெளி நாட்டு கம்பெனிகளாகவும் உள்ளன. இருந்த போதிலும் அவை விவசாயிகளுக்கு எந்தப் பலனும் தருவதில்லை. இன் றைக்கு சிறு விவசாயி, நடுத்தர விவசாயி, பணக்கார விவசாயி கள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு கடன் கிடைப்ப தில் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. வங்கிக் கடன் என்பது விவசா யிகளுக்கு பெரும் கனவாகவே உள்ளது. இந்த நாட்டின் பெரு முதலாளிகளான அம்பானி களுக்கும், அதானிகளுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் கடன் கிடைக்கிறது. ஆனால் விவ சாயிகளுக்கு கடன் என்பது குதி ரைக்கொம்பாக உள்ளது. விவ சாயிகள், வேளாண்துறை நெருக் கடிகளுக்கு என்னதான் தீர்வு
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அமலாகவில்லை
2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி அதி காரத்தில் இருந்தபோது உலகம் முழுவதும் பரவலாக தெரிந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில், விவசாயிகளுக்கான தேசிய அள விலான ஆணையம் அமைக்கப் பட்டது. அந்த ஆணையம் 2006 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் செய்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளை சந்தித்து, ஐந்து அறிக்கைகளை அன்று அரசுக்கு தந்தது. அதில் முக்கியமான மூன்று தீர்வு என்னவென்றால், இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்ச ஆதார விலையை நாம் நிர்ணயிக்க வேண்டும்.
அதாவது உற்பத்தி செலவோடு ஒன்றரை மடங்கு லாபம் சேர்த்து தர வேண்டும். இந்தியா முழுவதும் விவ சாயிகள் வாங்கி இருக்கக்கூடிய விவசாயக் கடனை ஒருமுறை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் ஒரு பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு அறி விக்க வேண்டும் என எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்து ரைத்தது. ஆனால் 18 ஆண்டுகள் கடந்த நிலையிலும், எந்த அரசும் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல் படுத்தவில்லை என்பது வேதனை. டெல்டாவின் முக்கிய மான பயிராக நெல் விவசாயம் உள்ளது. கரும்பு, பருத்தி, காய்கறி விளைவிக்கப்பட்டா லும், நெல்தான் முக்கிய சாகு படி பயிராக உள்ளது. ஒன்றிய அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2, 350 அறிவித்துள்ளது. தனியாக தமிழ்நாடு அரசு சாதாரண ரகத்துக்கு 105 ரூபாய், சன்ன ரகத்திற்கு 130 ரூபாய் என அறி வித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை நான் பாராட்டுகிறேன். ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒரு குவிண்டாலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,350 போதுமானதா? பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,820 ரூபாய் தரப்படுகிறது. அந்த மாநி லத்தில் ஒவ்வொரு ஆண்டும் அது மேலும் உயர்த்தி கொடுக்கப் படுகிறது. ஏறத்தாழ எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைக்கு நெருக்கமாக இந்த தொகை வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு குவிண்டா லுக்கு குறைந்தபட்சமாக 3,000 ரூபாயாவது தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம். இதேபோல் கரும்புக்கும், பருத் திக்கும் ஒரு லாபகரமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஒருமுறை கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம்.
பயிர்க் காப்பீடு கணக்கீடு முறையை மாற்றியமைக்க வேண்டும்
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கணக்கீடு செய்யும் முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். இன்று நடைமுறை யில் இருக்கக்கூடிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லாபம் தரக் கூடிய திட்டமாக உள்ளது. அதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயி களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், அந்த பயிர் காப்பீட்டு திட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றால், நாம் ஒரு வலுவான போராட் டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைத் தலைவர் கே. முகமது அலி, மாநில துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர்கள் எம். சேகர் (திருவாரூர்), ஏ.சித்தார்த் தன் (நாகப்பட்டினம்), ஏ.ராமை யன் (புதுக்கோட்டை), ஆர்.நட ராஜன் (திருச்சி புறநகர்), ந. கார்த்திகேயன் (திருச்சி மாநகர மாவட்டம்) இர.மணிவேல் (பெரம்பலூர்) மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.தம்பு சாமி, எம்.என்.அம்பிகாபதி, டி. சிம்சன், பி.குணசுந்தரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா நன்றி கூறினார்.