“வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். அதே போல காலநிலை மாற்றத்தால் ‘மரைன் ஹீட் வேவ்’ மாதக் கணக்கில் தொடர்கிறது. “மரைன் ஹீட் வேவ்” காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்ற தாக மாறும்” என ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தை களுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். தன் மனைவியை வீடு புகுந்து வன்முறையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொலை செய்ததாக கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
“ஜார்க்கண்ட்டில் “இந்தியா” கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் போது பெண்களுக் கான கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்கு றுதிகள் நிறைவேற்றப்படும்” என்று மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
“தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியா னது; அதன் உள்ளே எதுவுமே இல்லை” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டி கள் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து 3 நாட்களே ஆன 5 நாய்க் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.