tamilnadu

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வாம்

சென்னை, டிச.6- அதிமுக  ஒருங்கிணைப்பாளர் மற் றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி களுக்கு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   அதிமுக  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பத விக்கான தேர்தல் அறிவிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் ஆணையாளர்களாக அமைப்பு செயலாளர் சி.பொன்னை யன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகி யோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பத விக்கு எடப்பாடி பழனிசாமி ஆகி யோர் மனுத்தாக்கல் செய்தனர். மேலும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி யிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக உறுப்பினர் ஒருவரை அங் குள்ள தொண்டர்கள்

‘நன்கு கவனித்து’ அடித்து விரட்டினர்.  மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப் பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்டாலும், வேறு சிலரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கி ணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி களுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனி சாமி ஆகியோர் போட்டியின்றி தேர் வாகி உள்ளனர்.  இதுபற்றி அக்கட்சி யின் தேர்தல் ஆணையர்கள் வெளி யிட்டுள்ள செய்தியில், ஓ. பன்னீர்செல் வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஏராளமான மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டிருந்தன. இதனை யடுத்து இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர் என அறிவித்த னர்.