tamilnadu

img

செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் ஆலை

செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் ஆலை

முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஜூன் 4- அஜைல் ரோபோட்ஸ் நிறுவனம்  300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா வில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள்  உற்பத்தி ஆலையை அமைத்து உள்ளது. இந்நிலையில், தொழில், முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்  துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் இந்த ஆலையை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நிறுவனத் தின் முக்கிய நிர்வாகிகள் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் பேசுகையில், “இந்த நிறு வனம் மூலமாக முதற் கட்டமாக 300  பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும். இந்தியாவிலேயே முதல் முறை யாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த  ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு  சிறந்த முறையில் வழிக்காட்டுதல் கள் வழங்கியுள்ளது. தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ் நாடு இருக்கிறது. எனவே, மேலும்  முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், துறையின் செய லாளர் வி. அருண்ராய், நிறுவன அதி காரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.