த.கண்மணி
பரபரப்பான மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அடிப்படைத் தேவையாக பல நூறு ஆண்டுகளாக மனித வாழ்வோடு பிணைக்கப்பட்டுள்ள ஒரு பொருளாக கருதப்படுகிறது இந்த “காபி”. உலகெங்கிலும் இந்த காபியை பல்வேறு வகைகளில் மக்கள் விளைவிக்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நமது இந்திய நாட்டின் காபிக்கு என்று சந்தையில் இன்றளவும் தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் காபி உற்பத்தி என்பது மலைப்பகுதி மக்களால் மலைப்பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்திய மலைச்சாரல் களில் நிழலில் விளையும் இந்திய காபி கொட்டைகளின் தரமானது உலகின் வேறு பகுதிகளில் நேரடி சூரிய ஒளியில் விளையும் காபி கொட்டைகளின் தரத்தை விட சிறந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில் சுமார் 2,50,000 காபி விவசாயிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 98 சதவீதம் சிறுவிவசாயிகள் ஆவர். மேலும் இந்தியாவில் காபி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலங் களாக இருப்பவை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரா மற்றும் ஓடிசா போன்றவை. அதுமட்டுமின்றி இந்தியாவிலும் காபிக்கு அடிமையானவர்களும், காபி இல்லையேல் தம்மால் உயிர் வாழவே இயலாது என்ற மனநிலையோடு இருப்பவர்களும் இருக்கத்தான் செய் கிறார்கள். தமிழகத்தில் காபி உற்பத்தி என்பது மிகவும் பழமை யான ஒன்றே. முந்தைய கணக்கெடுப்பின்படி தமிழ்நாட் டில் ஒரு லட்சம் ஏக்கர் வரை காபி பயிரிடப்பட்டுள்ளது. 17,880 விவசாயிகள் காபி பயிரிட்டுள்ளனர். அதுமட்டு மின்றி 2017-2018 இல் 21,400 டன்கள் காபி தமிழகத்தில் உற்பத்தியாகி உள்ளது.
தமிழகத்தில் அதிகம் காபி விளை விக்கும் பகுதிகளாக இருப்பவை நீலகிரி, சேலம் மாவட்டம் ஏற்காடு கருமந்துறை, தேனி மாவட்டம் போடி, பெரிய குளம், திருப்பூர் வால்பாறை, நாமக்கல் கொல்லிமலை மற்றும் திண்டுக்கள் மாவட்டம் கொடைக்கானல். காபி உற்பத்தியும் விவசாயிகளின் கருத்தும் தமிழகத்தில் அதிகளவில் காபி உற்பத்தி செய்யும் இடங்களுள் ஒன்று இந்த கொடைக்கானல். அங்கு வாழும் மக்களில் அதிகப்படியானோர் விவசாயம் ஒன்றையே தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த காபி விவசாயத்தை நம்பி கொடைக்கானல் மட்டு மல்லாது அதை சுற்றி உள்ள பல குக்கிராம மக்கள் வாழ்ந்து வருவதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். அங்கு காபி விவசாயம் மட்டுமல்லாது ஆரஞ்சு போன்ற பழ வகை களும் எண்ணற்ற பயிர் வகைகளும், மிளகு போன்ற பொருட்களும் பயிரிடப்பட்டு விளைச்சலுக்கு வருகிறது. பொதுவாக காபி விவசாயம் என்று பார்த்தால் முதலில் அதன் வகைகள். காபியில் அதிகமான வகைகள் உண்டு. அந்த வகையில் நமது மண்ணுக்கு அதிக விளைச்சல் தரக்கூடிய காபி வகையாக அவ்வூர் விவசாயிகள் கூறுவது “அராபிக்கா”. இந்த அராபிக்கா வகை காபி தான் கொடைக் கானலிலும் அதை சுற்றிய கிராமங்களில் அதிகம் பயிரிடப் பட்டு வருவதாக அவ்வூர் விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இது எந்த செயற்கைப்பொருள் கொண்டும் தயாரிக்கப்படுவதில்லை முழுக்க முழுக்க இயற்கை மூலம் கிடைப்பதால் உடலுக்கு மிக நல்லது என்றும், கூறுகின்ற னர். இது போன்ற இயற்கை விவ சாயத்தின் மூலம் கிடைத்த காபி அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் இது போன்ற காபியில் தான் அதிகம் இரும்புச் சத்து இருப்பதாக கூறு கின்றனர். இந்த கொடைக்கானல் காபி இந்தியா முழுவதும் ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் காபி விவசாயத்தில் உள்ள கஷ்டங்கள் பற்றி விவசாயிகளி டம் கேட்டபொழுது “விவசாயம் என்றாலே கஷ்டம் தான். அதுவும் மழை நேரங்கள்ல எங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். அந்த காபி பழங்கள செடில இருந்து வீணாகிறாம எடுக்குறதுக்கும், பல நேரங்கள்ல வேலை ஆட்களே கிடைக்க மாட்டங்க. அப்போலாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். மேலும் காபில வருடத்துக்கு ஒரு முறைதான் வருமானம் வரும் குறிப்பா அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள்ள தான் காபி விளைச்சல் நடக்கும். அதுபோக மற்ற நாட்கள்ள வேறு காய்கறிகள், பழங்கள நாங்க விளைச்சல் பண்ணுவோம். இன்னொன்னு காப்பிய பொறுத்தவரையில் ஒரு வருடத்துக்கு விளைச்சல் அதிகம் குடுத்தா மறு வருடமே விளைச்சல் குறைந்துவிடும், காப்பிய பொறுத்தவரையில் ஒரே மாதிரியான விளைச்சல் மற்றும் வருமானம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்று கூறுகின்றனர் அவ்வூர் விவசாயிகள். மேலும் விவசாயிகளிடம் கொரோனா நேரங்களில் காபியின் விளைச்சல் பற்றியும் அதன் ஏற்றுமதி பற்றியும் கேட்ட பொழுது “கொரோனாவால எங்களுக்கு பெருசா பாதிப்பல்லாம் ஒன்னும் இல்ல. எங்களுக்கு எப்போதும் போல தான் நாட்கள் ஓடுச்சு.
உலகமே முடங்கிப்போய் இருந்தாலும் விவசாயிகளுக்கு எப்போவுமே வேலை இருந்துக்குட்டுதான் இருந்துச்சு, இருக்கும். அதுல எந்த மாற்றமும் இல்லை என்கின்றனர் கொடைக்கானல் காபி விவசாயிகள்.அதுமட்டுமின்றி இப்பொழுதும் ஏராள மான படித்த இளைஞர்கள் பலர் இந்த காபி விவசா யத்தில் அதிகம் ஆர்வத்தோடு இறங்கி வேலை செய்கின்ற னர். இது மேலும் எதிர்கால காப்பி விவசாயத்திற்கு பெரும் மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காபி தயாரிக்கப்படும் முறை காபி விவசாயத்தில் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் அறுவடை காலங்கள். எனவே அந்த நாட்களில் காபிச் செடிகளில் இருந்து காபி பழங்களை எடுத்து அதனை நன்றாக கழுவுவர். பிறகு கழுவி எடுத்தப் பழத்தை ரோதை என்னும் கருவியில் இடுவர். இந்த ரோதை என்னும் கருவியின் உதவியுடன் காபி பழத்தின் தோல் தனியாக நீக்கப்படும்.அதனை அரைத்த பிறகு சாக்கு மூலம் நிரப்பட்டு கட்டி வைத்துவிடுவர். அதன் பிறகு ரோஸ்டிங் கருவி என்று சொல்லக்கூடிய கருவிமூலம் காபிக் கொட்டைகளை நிறம் மாற்றுவர், நிறம் மாற்றப்பட்ட காபிக் கொட்டைகளை அரிசி ஆலைக்கு எடுத்துசெல்லப்பட்டு நன்கு அரைத்து காபி பொடியாக மாற்றுவர். இதுவே காபி தயாரிக்கும் முறை என்று அவ்வூர் விவசாயிகள் கூறுகின்றனர்.