வடகாடு தலித் மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியரிடம் பெ.சண்முகம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, மே 10- “வடகாட்டில் பாதிக்கப்பட்ட தலித் மக்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், வழக்கை நேர்மையாக நடத்த வேண்டும் என்று “ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இருதரப்பினரிடையே நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையும், இதர சமூகத்தி னரையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சனிக்கிழமையன்று நேரில் சந்தித்துப் பேசி னார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரி வித்தார். பின்னர் புதுக்கோட்டை கட்சி அலுவல கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வடகாட்டில் நிலவும் பதற்றமான சூழ லைக் கணக்கில் கொண்டு மாவட்ட நிர்வா கம் சரியான முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்து இருந்தால் இரு தரப்பினரி டையே ஏற்பட்ட மோதலை தவிர்த்து இருக்க லாம். அங்கு பிரச்சனை உள்ளது என்று தெரி யும் போது, கோவில் திருவிழா நடக்கும் நேரத்தில் கூடுதல் பாதுகாப்பு அளித்து இருக்க வேண்டும். பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. வருவாய்த்துறை யினர் உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி உரிய நிவாரணத்தை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மே 5 அன்று இரவு நடந்த சம்பவத்திற்கு 6-ஆம் தேதி காலையி லேயே காவல்துறை வெளியிட்ட அறிக்கை கண்டிக்கத்தக்கது. புலன்விசாரணை தொடங்கும் முன்பே அறிக்கை கொடுத் தது ஏற்புடையதல்ல, இதுபோல் அதி காரிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் புதிய நடைமுறையை கையாளுகின்றனர். இது அரசுக்கு தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரின் இந்த நடவடிக்கை, வழக்கு நேர்மையான முறையில் நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கை வேறு நேர்மையான அதி காரிக்கு மாற்ற வேண்டும். மேலும், சம்ப வத்தில் சம்மந்தப்படாத எவரையும் காவல் துறை கைது செய்யக்கூடாது. இருதரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும். மேலும், இரு பிரிவினருக்கும் இடையே உள்ள பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் சுமூகமான முறையில் பேசி முடிக்க வேண்டும். கோவில் மற்றும் விளையாட்டு மைதானம் தொடர்பாக, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு வரும் பட்சத்தில் எந்த தீர்ப்பாக இருந்தாலும் இரு தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் தெரி வித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். பாஜக - அதிமுக கூட்டணி, சந்தர்ப்ப வாதக் கூட்டணி. வக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக அதிமுக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. பிறகு ஒரு வாரத்தில் கூட்டணியில் சேரும் வகையில் பாஜக அணுகுமுறை யில் என்ன மாற்றம் வந்தது?. வழக்குக்கு பயந்து, ஏற்கெ னவே சேர்த்து வைத்த சொத்துக் களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அதிமுக - பாஜக சந்தர்ப்ப வாதக் கூட்டணி அமைத்துள்ளனர். நாங்கள் சொல்வதைக் கேட்டு தங்களுடைய அணிக்கு கட்சித் தலை வர்களை இழுக்கும் தந்திரமாகத்தான் அமலாக்கத்துறை, வருமானவரித் துறை போன்றவற்றை பாஜகவினர் பயன்படுத்தி வருகின்றனர். திமுக அரசு சொன்னதையும் செய்து உள்ளனர். சொல்லாததையும் செய்து உள்ளனர். அதே நேரத்தில் சொன்னதை செய்யாமலும் உள்ளனர். நிறை வேற்ற வேண்டிய நிலுவையில் உள்ள வாக்குறுதிகளை விரைந்து நிறை வேற்ற வேண்டும்.
“போரை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை” “
பஹல்காமில் நடைபெற்ற தீவிர வாத தாக்குதல் கடுமையான கண்டனத் துக்குரியது. இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருந்த பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ‘ஆபரே ஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தா னில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் எடுத்த நடவ டிக்கையை வரவேற்கின்றோம். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இரு நாட்டு அப்பாவி மக்கள் பாதிக்கும் வகையிலான, யுத்த நடவடிக்கை என்பது ஏற்கத்தக்கதல்ல. ராஜீய ரீதி யாக சர்வதேச அழுத்தத்தின் மூலமாக பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு வழிகள் இருக்கின்றன. சென்னையில் நடைபெற்ற பேரணி யில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்க வில்லை.” இவ்வாறு பெ.சண்முகம் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு
பின்னர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணாவைச் சந்தித்த மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “வடகாட்டில் தொடர்ந்து அமைதி நிலவும், பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வும் வலியுறுத்தினார். மேலும், முற்றிலுமாக எரிக்கப்பட்ட வீட்டிற்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கட்டித்தரவும் கோரிக்கை விடுத்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின் போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ், தலைவர் த. செல்லக்கண்ணு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ். கவிவர்மன், ஏ. ஸ்ரீதர், த. அன்பழகன், சு. மதியழகன், கி. ஜெய பாலன், ஒன்றியச் செயலாளர்கள் எல். வடிவேல், ஆ. குமாரவேல், துரை. அரி பாஸ்கர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஜீவா னந்தம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி, செயலாளர் பி. சுசிலா, பொருளாளர் ஜெ. வைகை ராணி, வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் எஸ். ஜனார்த்தனன், செயலா ளர் ஆர். மகாதீர், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். வசந்த குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.