விருதுநகர் மாவட்ட செந்தொண்டர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி
விருதுநகர், மே 27- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில் ஏராளமான செந் தொண்டர்கள் அணி வகுப்பில் கலந்து கொண்ட னர். இந்நிலையில், விருது நகர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற செந்தொண்டர் களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகரில் தோழர் என்.வி நினைவரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.முருகன் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் எம்.ஜெயபாரத் வரவேற்புரை யாற்றினார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி பேசினார். மாநில செயற்குழு உறுப்பி னர் செ.முத்துக்கண்ணன் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.