tamilnadu

img

செந்தொண்டர்களுக்கு குமரி மாவட்டத்தில் பாராட்டு விழா

செந்தொண்டர்களுக்கு  குமரி மாவட்டத்தில் பாராட்டு விழா

குழித்துறை,ஜூன் 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது, இந்த மாநாட்டுப் பேரணியில் தமிழகம் முழுவதுமிருந்து செந்தொண்டர்கள் பங்கேற்றனர்.  குமரி மாவட்டத்தில் இருந்து  பங்கேற்ற செந்தொண்டர்களுக்கு பாராட்டு விழா  மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். நல்லூர் வட்டார செயலாளர் எம் ஜஸ்டின் வரவேற்று பேசினார்.  மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் ஆகியோர் செந்தொண்டர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி விஜயமோகனன், என் ரெஜிஸ் குமார், நீலாம்பரன், வட்டார செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். செந்தொண்டர் குழு உறுப்பினர் ஜோதிஷ் நன்றி கூறினார்.