தோழர் குமார் ஆனந்தன் நினைவு தினம் வாலிபர் சங்கத்தின் போதை எதிர்ப்பு பேரணி
கடலூர், ஜூன் 28 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக போதை எதிர்ப்பு பேரணி கடலூரில் நடை பெற்றது. கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடி உயிர் நீத்த தோழர் குமார் ஆனந்தனின் 26 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்த பேரணி நடை பெற்றது. பெரியார் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி, புதுப்பாளையம் குமார் ஆனந்தன் படிப்பகத்தை அடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் ஏ.ஆனந்தராஜ் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாநில இணைச் செயலாளர் எஸ். செல்வராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்டச் செயலாளர் எஸ்.வினோத்குமார், மாவட்டப் பொருளாளர் பி. சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தமிழ்ச்செல்வன், எம். கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநகரக் குழு உறுப்பினர் தர்மராஜ் நன்றி கூறினார். இதில் மக்கள் ஒற்றுமை, அறிவியல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போதைக்கு எதி ரான உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாண வர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கல் மற்றும் ரத்த தானம் வழங்கியவர்களை கௌர விக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.