புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் வீ.பாலமுருகன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மு.பழனித்துரை முன்னிலையில், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.