tamilnadu

img

முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்த சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள்!

சங்கத்தைப் பதிவு செய்து, வழக்குகளை திரும்பப் பெறவும் வலியுறுத்தல்

சென்னை, அக். 26 - ‘சாம்சங் இந்தியா தொழிலா ளர்களின் போராட்டத்திற்கு சுமூகத் தீர்வு கண்டமைக்காக, முதல்வர் மு.க. ஸ்டாலினை சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அத்துடன் சாம்சங் தொழிலா ளர்கள் அமைத்துள்ள தொழிற்சங் கத்தை தொழிலாளர் துறை பதிவு  செய்வதற்கும், 38 நாள் போராட்டத் தின் போது, தொழிலாளர்கள் - தொழிற்சங்கத் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள காவல்துறை வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்  தனர்.

சாம்சங் தொழிலாளர் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்  புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்  காட்டில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறு வனத்தின் பணிபுரியும் தொழிலாளர்  கள் ஆலையில் தொழிற்சங்கம் அமைப்  பது, ஊதிய உயர்வு, பணி நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், சி.வி. கணே சன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உள்  ளடக்கிய குழு முன்னின்று, தொழிலா ளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு  நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதனடிப் படையில் போராட்டத்தை திரும்ப பெற்றதுடன் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். இந்நிலையில், சனிக்கிழமை யன்று (அக்.26) தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலினை, அவரது  முகாம் அலுவலகத்தில் சிபிஎம் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல்.  திருமாவளவன் ஆகியோர் சந்தித்தனர். கே. பாலகிருஷ்ணன் பேட்டி முதலமைச்சருடனான சந்திப் புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்  தித்த கே. பாலகிருஷ்ணன், சாம்சங்  போராட்டத்திற்கு தொழிலாளர் களுக்கு ஆதரவு தெரிவித்து இடது சாரிகள் சார்பில் போராட்டம் நடத்தி னோம். அதனைத் தொடர்ந்து போரா ட்டம் நடத்தி வந்த தொழிலாளர்களை  சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக,  மனிதநேய மக்கள் கட்சி சென்று தலைவர்கள் சந்தித்தோம். அப் போது, விரைவில் முதலமைச்சரை சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கையை விளக்குவோம். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு  வருவோம் என்று வாக்குறுதி அளித்  தோம். 

முதல்வர் எடுத்த முயற்சிக்கு நன்றி

அதன்பிறகு, அமைச்சர்கள் குழு  நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக  முடிவு எட்டப்பட்டது. இதைத் தொட ர்ந்து இன்றைக்கு (சனிக்கிழமை) முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டோம். சாம்சங் தொழிலாளர்கள் போரா ட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்கும் சென்று விட்ட நிலை யில், சங்கத்தை பதிவு செய்யும் விவ காரம் இன்னும் முடிக்கு வராமல் நீடித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே, இந்த வழக்கை மிக விரைவில் முடி வுக்கு கொண்டு வருவதற்கு ஒரு  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று  முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

வாய்தா வாங்கும்  தொழிலாளர் துறை

அதே நேரத்தில், இந்த வழக்கை முடி வுக்கு கொண்டு வராமல் மேலும் கால தாமதம் செய்யும் நோக்கத்தில் அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் வாய்தா வாங்குவது குறித்து செய்திகள் வருகிறது. அது வேண்டியதில்லை என்பதையும் குறிப்பிட்டு கோரிக்கை விடுத்தோம். தொழிற்சாலை நிர்வாகம் சங்கம் வைக்கக் கூடாது என்கிறது. தொழிலாளர் கள் சங்கம் அமைப்போம் என்று கூறு கின்றனர். அதைச் சட்டப்படி தொழிலாளர் நலத்துறை பதிவு செய்ய வேண்டும். எனவே, நீதிமன்ற வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்! மேலும், இந்த போராட்டக் காலத்தில் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் போட்டுள்ளனர். அனைத்து வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இதனால், வேலைக்கு செல்லும் தொழி லாளர்களும் பாதிக்கின்றனர். ஆகவே, அந்த  வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல மைச்சர் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

இந்த சந்திப்பின்போது முதலமைச்ச ருடன் இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பேச்சுவார்த்தையின் போது நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறினார். தொழிலாளர்கள் மீது போடப் பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக தொழிலா ளர் நலத்துறை ஆணையர் மற்றும் தொழி லாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரு டன் பேசி மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கி றோம் என்றும் தெரிவித்துள்ளனர். பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கே. பால கிருஷ்ணன், “தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த அரசும் முதலமைச்சர் எடுக்கும் முயற்சிகளை பாராட்டுகிறோம். அதே நேரத்தில், தொழிலாளர்களின் உரிமை களும் விட்டுக் கொடுக்கப்படக் கூடாது, அதனை பாதுகாக்க வேண்டியது அவசிய மானது என்பதையும் மூன்று கட்சிகள் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம்” என்றார். தொல். திருமாவளவன் எம்.பி., இதைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “சாம்சங் தொழிலா ளர்களின் போராட்டம் தொடர் போராட்டமாக ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தது. அது தீவிரம் அடைந்த சூழலில், தோழமைக் கட்சிகள் சார்பில் அந்த தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அன்றைக்கு தொழிலாளர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதி, இந்த போராட்டத்தை சுமூகமான முறையில் முடிக்க வேண்டும். அதற்காக நாங்கள் முதல்வரை சந்தித்து, அவரது தலையீடு இதில் மிகவும் அவசிய மானது என்பதை வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தோம். 

முதல்வர் பரிசீலிப்பார்

அதன்படி இப்போது சந்தித்தோம். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் சுமூக மான முறையில் தீர்வு காண முதலமைச்சர் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரி வித்தோம். அப்போது, தொழிலாளர்கள் குறித்து முதல்வர் விரிவாக கேட்டறிந்தார். அப்போது, அந்த தொழிலாளர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அனைவரும் வலி யுறுத்தினோம். அதேபோல், இந்த போராட் டத்தை ஆதரித்து போராட்டம் நடத்திய இடது சாரி கட்சித் தலைவர்கள் கே. பால கிருஷ்ணன், இரா. முத்தரசன் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல மைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அனைத்தையும் பணிவோடு கேட்டுக் கொண்ட முதலமைச்சர் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்.

இரா. முத்தரசன் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசுகையில், “எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தித் தான் சங்கம் அமைக்கப்படுகிறது. இது இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. எனவே, சாம்சங் நிறுவனம் சொல்லும் காரணம் சரியானதும் அல்ல ஏற்புடையது அல்ல. பொறுத்தமானது கிடையாது.  உப்புச் சப்பில்லாத  காரணங்களை கூறும் சாம்சங் தொழிலாளர்கள் 36 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் எங்களுக்கு 100 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது என்று நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிர்வாகம் மட்டுமல்ல, வேறு பல  நிறுவனங்களின் நிர்வாகங்களும் இதே கருத்தை தான் தெரிவிக்கும். தொழிலா ளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது எங்க ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று எந்த ஒரு ஆலை நிர்வாகமும் சொன்னது கிடையாது. சொல்லவும் மாட்டார்கள். இது ஒரு உப்புச் சப்பு இல்லாத வாதமாகும். சாம்சங் நிறுவனத்தில் சிஐடியு சங்கத்தை பதிவு செய்யக் கூடாது என்பதற்காகவும் பிரச்சனைகளைத் திசைத் திருப்பவுமே 100 மில்லியன் டாலர் இழப்பு என்கி றார்கள். அது அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வகையான முயற்சியாகும்” என்றார்.