சின்னாளப்பட்டி,ஜன.7- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளான மைக் கேல் பாளையம், காமலா புரம், கொடைரோடு, பள்ளப் பட்டி, விளாம்பட்டி, மட்டப் பாறை, அணைப்பட்டி, சித் தர்கள்நத்தம் பிள்ளையார் நத்தம், ஒட்டுப்பட்டி,நரி யூத்து ஆகிய கிராமங்களில் மல்லிகை,செவ்வந்தி,கனகாம்பரம்,கோழிக்கொண்டை,சென்டு,வாடாமல்லி ஆகிய பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. பூக்களின் விலையும் சராசரியாக 50 முதல் 100 ரூபாய் வரை செல்வதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .இதமான காலநிலை கார ணமாக செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. அனைத்து ரக பூக்களும் அறுவடை செய் யப்பட்டு தமிழக முழுவதும் மட்டுமின்றி கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.