tamilnadu

img

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழகம் முழுவதும் மக்கள் எழுச்சி மாநாடுகள்-போராட்டங்கள்

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு

சென்னை,செப்.21- நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்  என்றும் ‘நீட்’ தேர்விலிருந்து  விதி விலக்குப் பெற ஒன்றிய அரசை வலி யுறுத்தியும்  மக்கள் எழுச்சி மாநாடு கள் - போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  சென்னை பெரியார் திடலில்  செப்டம்பர் 21 செவ்வாய்க்கிழமை யன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடை பெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

இரங்கலும் - வேண்டுகோளும்!

‘நீட்’ தேர்வில் இரண்டு மூன்று  முறை முயற்சித்தும் வெற்றி கிட்ட வில்லை என்ற விரக்தியாலும், ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு இருக்காது என்ற அச்சத்தாலும் தற்கொலை முடிவுக்கு வந்து உயிரைப் போக்கிக் கொள்வதை மாணவக் கண்மணிகள் கைவிட வேண்டும். தற்கொலை எவ்வகை யிலும் தீர்வாகாது; போராடி வாழ்க்கையில் வெற்றி பெறும் மன உறுதியை வளர்த்து, தோல்விகள் கண்டு கலங்காத நெஞ்சுரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென இக்கூட்டம் அவர்களுக்கு அன்பான வேண்டுகோளை விடுக்கிறது. அந்த ‘நீட்’ தேர்வு ஒழிப்புக் கான களம் காண, நாங்கள் அனை வரும் ஒன்றுபட்டு உங்களின் மருத்துவக் கல்வி உரிமைக்காகப் போராட என்றும் ஆயத்தமாக உள் ளோம் என்பதால், இப்படிப்பட்ட அவசர முடிவுக்கு வந்து உங்கள் பெற்றோர், உற்றார் உறவினர் களுக்கும், எங்களுக்கும் வேத னையை உருவாக்கவேண்டாம் என்றும் மாணவக் கண்மணிகளை வேண்டிக் கொள்கிறோம்.

சட்ட முன்வடிவுக்கு  ஒப்புதல் வழங்குக!

2016 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினை கார ணமாக முன்னிறுத்தி, அனைத்திந் திய அளவில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அர சால் கட்டாயமாக்கப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் விருப்பமும், வேண்டுகோளுமாக இருந்து வருகிறது. ‘நீட்’ தேர்வுக்கு  எதிராக வலுப்பெற்ற மக்கள் எழுச்சி க்குப் பணிந்து முந்தைய அ.தி.மு.க. அரசு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்குப் பெறும் வகை யில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், இரண்டு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து,  தி.மு. கழகம் உள்ளி ட்ட அனைத்து கட்சிகளும் ஏகமன தாக ஆதரித்ததன் அடிப்படையில், அம்மசோதா சட்டமாக நிறை வேற்றப்பட்டு, குடியரசுத் தலைவ ரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்டும், அரசினால் எவ்விதப் பின் நடவடிக்கையும் எடுக்கப்படாத தால், அவை பயனுமின்றி காலா வதி ஆகிவிட்டன. இந்நிலையில், கடந்த சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. வழங்கிய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த படி முந்தைய அரசு, அவசர கோல த்தில் சட்டப்படியான முகாந்திரமும், நியாயப்படியான நிலைப்பாடு எதனையும் நிறுவிட முன்வராமல் மசோதாவைக் கொண்டுவந்து  நிறைவேற்றியதைப்போல் அல்லா மல், சட்ட முறைமைகளை (Due  Process) முறையாகக் கடைப்பிடிக் கும் விதமாக ‘நீட்’ தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன்  தலைமையில் ஆணையம் அமைத்து, சமூக, பொருளாதார, கல்வி நிலை அடிப் படை காரணங்களை முறையாக ஆராய்ந்து வழங்கப்பட்ட அவ்வா ணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்ட மசோதா இயற்றப்பட்டு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தகைய முறையான, சட்டப் படியான, தீர்க்கமான அணுகு முறை அடிப்படையில் இச்சட்டத்தை  நிறைவேற்றிய தமிழ்நாடு அரசை யும், குறிப்பாக தமிழ்நாடு முத லமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர் களையும், இக்கூட்டம் மனதாரப் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் இசை வினையும் பெற தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் எடுக்கும் முயற்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள்  முழு ஆதரவினையும் வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருக!

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் திணிக்கப்பட்டுள்ள ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வு- ஒடுக்கப்பட்ட மக்களையும், முதல் தலைமுறையாகப் படிக்க வரு வோரையும், கிராமப்புற மக்களை யும் கடுமையாகப் பாதித்து, மருத்துவக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.  இதுவரை தமிழ்நாட்டில் 17 இருபால் மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது மிகப்பெரிய கொடுமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக வுரையில் உத்தரவாதம் செய்யப் பட்டுள்ள சமூகநீதி என்னும் உயிர் - ‘நீட்’ என்னும் கொடுவாளால் முற்றி லும் பறிக்கப்பட்டு விட்டது. ‘நீட்’ தேர்வு மாநில உரிமைக்கும், மாநில பாடத் திட்டத்திற்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் எதி ரானது. ‘நீட்’ தேர்வு சமூகநீதிக்கு எதி ரானது; ‘நீட்’ ஒன்றும் தகுதிக்கு அள வுகோல் இல்லை. ஊழலுக்கு அப்பாற் பட்டது என்பதும் உண்மையல்ல - ‘நீட்’ கேள்வித்தாள் ரூ.35 லட்சத்திற்கு விலை போயுள்ளது.

இந்த நிலையில், ‘நீட்’ அறவே நீக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதற் காக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல வகைகளிலும், வழிகளிலும், பல  வடிவங்களிலும் ஜனநாயக வழி களில் எல்லாம் எதிர்ப்புகள் தெரி விக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இரண்டு முறை ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஒரு மனதாக மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டும் உள்ளன. கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டி யலில் இருந்தும், மாநில அரசின் முறையான எதிர்ப்பை - கோரிக்கை யை முறையாகப் பரிசீலிக்காமலும், மாநில அரசின் குரலை மதிக்கா மலும், தானடித்த மூப்பாக, எதேச்சதி காரமாக ‘நீட்’டை நடைமுறைப் படுத்துவதில் மூர்க்கத்தனமாகவே ஒன்றிய அரசு நடந்து வருவது கண்ட னத்திற்குரியதாகும். கல்வி மீண்டும் மாநிலப் பட்டிய லுக்கே கொண்டு வரப்பட வேண்டும்  என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. ஒரு பக்கம் சட்டமன்றம், நீதி மன்றங்கள் மூலமாக போராட்டங் களை நடத்தி வந்தாலும், மக்கள்  மன்றத்தின் மூலமாக நடத்தப் படும் போராட்டம் மிகவும் முக்கிய மானதும், வலிமையானதுமாகும். கடந்த காலங்களில் மக்கள் பிரச்ச னையில் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்தியதன் மூல மாக, வெகுமக்களின் எழுச்சி காரண மாக கோரிக்கைகள், உரிமைகள் வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் வரலாறு. ‘நீட்’டுக்கு எதிராக வெகுமக்க ளின் எழுச்சி கிளர்ந்துள்ள நிலையில், அதனை ஒருமுகப்படுத்தும் வகை யிலும், மேலும் அதனைக் கூர்மைப் படுத்தும் வகையிலும் சமூகநீதிக் கான எழுச்சி மாநாடுகளை சென்னை,  மதுரை, கோவை போன்ற மாநக ரங்களில் நடத்துவது என்று இந்த  ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. மாணவர்கள், பெற்றோர், கல்வி யாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை

சமூகநீதி தொடர்பான கீழ்க்கண்ட அம்சங்களை நமது பிரச்சார திட்ட த்தில் மய்யப் பொருளாகக் கொள் வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

1. தந்தை பெரியார் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாளாக’’ அறிவித்து அர சுப் பணியாளர்களை உறுதிமொழி எடுக்கச் செய்த தமிழ்நாடு அர சுக்கும் மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதோடு - இடஒதுக்கீடு சரி வரப் பின்பற்றப்படுகிறதா என் பதைக் கண்காணித்திட கண்கா ணிப்புக் குழு அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். ஒன்றிய அரசும் இது போன்ற கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

2. அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பொதுத்துறையை விற்பதற்கென்றே (Disinvest ment) ஒரு தனித்துறை உருவாக்கப் பட்டது (அருண்ஷோரி என்பவர் அத்துறைக்கான அமைச்சராகவும் இருந்தார்). வாஜ்பாய் அரசு சொத்துக்களை விற்றது என்றால்,  தற்போதைய நரேந்திர மோடி தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA) அரசு சொத்துக் களை விற்பதோடு, அடமானம் வைக்கும் வேலையிலும் ஈடு பட்டுள்ளது.    அரசுத் துறை தனியார் கைக்கு மாற்றப்படும்போது, இடஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. எப்படியெனில் தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லை. இந்நிலை யில் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு அவசியம் தேவை.

3. சமூகநீதி என்று சொல்லும் பொழுது - அது பாலியல் நீதியையும் உள்ள டக்கியதாக இருக்கவேண்டும்.

4. நீதித்துறையில் தற்போது மாவட்ட நீதிபதிகள் வரை இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களி லும், உச்சநீதிமன்றத்திலும் நீதி பதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட வேண்டும்.

5.‘நீட்’ தேர்வு என்பது சமூகநீதிக்கு எதி ரானது என்றும், ‘நீட்’ ஒன்றும் தகு திக்கு அளவுகோல் இல்லை என்றும், ‘நீட்’ கேள்வித்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படு வதும் - ஆள்மாறாட்டம் செய்யப் படுவதும் - இது யாருக்குப் பயன் படக் கூடியது என்பது விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே ‘நீட்’ என்பது சுத்தப் புரட்டு என்பதும் இவற்றின்மூலம் அம்பலமாகி விட்டது என்பதையும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

6. மருத்துவ மாணவர் சேர்க்கையில், இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு உள்ளிட்ட எந்தப் படிப்பு களிலும் ‘நீட்’ தேர்வு நுழைய அனு மதிக்கக் கூடாது.

7. அகில இந்திய தொகுப்புக்கு, மருத்துவ இடங்களை வழங்குவதி லிருந்து தமிழ்நாடு விலக்கு பெற வேண்டும்.

8. மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்யப் ப்படவேண்டும்.

சமூக வலைதளங்களில்  பிரச்சாரம் செய்க!

சமூக வலை தளம் என்பது இந்தக் காலகட்டத்தில் பிரச்சார யுக்தி யில் மிக முக்கியமான இடத்தினை வகிப்பதால், முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் முதலியவைமூலம் சமூகநீதியின் தேவையைப் புரிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொருவரும் நாள் தோறும் ‘நீட்’ எதிர்ப்புக்கான கார ணங்களையும், ‘நீட்’டினால் ஏற்படும் பாதிப்புகளையும் எளிய முறை யில் சிறப்பாகப் பரப்புவதை முக்கிய கடமையாகக் கொண்டு செயல்படு மாறும் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தேவையான வகைகளில் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுப் பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

பங்கேற்ற தலைவர்கள்

இக்கூட்டத்தில், திமுக  துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர்  கே.பாலகிருஷ் ணன், மாநிலக்குழு உறுப்பினர்  ஆறு முக நயினார்,  விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், வன்னிஅரசு, தலைமை நிலைய செயலாளர் அ.பாலசிங்கம், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்  ஆ.கோபண்ணா, மதிமுக அமைப் புச்செயலாளர்  ஆ.வந்தியத்தேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சியின் தலை வர்  எம்.எச்.ஜவாஹிருல்லா,  யாக்கூப், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீர பாண்டியன்,   மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்சு கஜேந்திர பாபு,அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் கோ.கரு ணாநிதி,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் துணைப் பொதுச்செயலாளர்  சத்ரியன் வேணுகோபால்,திராவிடர் கழக  துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர்  வீ.கும ரேசன்,  பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 



 

 

;