விருதுநகர், ஜூலை 23- விருதுநகரில் சட்டக் கல்லூரி துவங் கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே, சட்டக் கல்லூரியை இந்தக் கல்வியாண்டி லேயே தொடங்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜூலை 23 சனிக்கிழமையன்று விருது நகரில் தனியார் அரங்கில் நடைபெற் றது. மாநில துணைத் தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முத்து அமுதநாதன், மாநில பொருளாளர் சிவக்குமார், மாநில செயலாளர்கள் ஷாஜிசெல்வன், கே.பாண்டீஸ்வரி, மாவட்ட செயலாளர் எம்.சுப்புராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமீப காலங்களில் இறந்து போன வழக்கறிஞர்களின் குடும்பத்தார்க்கு உரிய சேமநலநிதியை பார்கவுன்சில் உடனடியாக வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வழக்கறிஞர்கள் கட்டண மின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னசேலம், கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்திட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடு மையான தண்டனை வழங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு களை செய்திட வேண்டும். மேலும், வெடி விபத்தில் பலியான மற்றும் காய மடைந்த தொழிலாளர்களின் குடும் பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.