சென்னை, ஜன. 5 - கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்களை 200ஆகவும், கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது சங்கத்தின் அகில இந்திய மத்திய செயற்குழு கூட்டம் வியாழனன்று (ஜன.5) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் 10வது அகில இந்திய மாநாட்டை பிப். 15-18 தேதிகளில் மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய பாஜக அரசு, விவசாய தொழி லாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பெற்றுவந்த உரிமைகள், சலுகைகளை பறித்து வருகிறது. பல சட்டங்களை ரத்து செய்துள்ளது. விவசாயிகளுக்கு கட்டுப் படியான விலை கிடைக்கவில்லை. உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் ஏப்.5 அன்று தில்லியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் 5 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணியில் லட்சக்கணக் கான தொழிலாளர்களை பங்கேற்க வைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. இதனால் சட்டப்படியான கூலி கூட கிடைப்பதில்லை. ஆண்டிற்காண்டு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வேலை நாட்களை 200 தினங்களாகவும், கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அமல்படுத்தப்படும் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் உயர்த்தி, திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, ஒன்றிய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மா னத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏ.விஜயராகவன்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் கூறியதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராள மான சலுகை அளிக்கும் ஒன்றிய அரசு, கிராமப்புற தலித் மக்களின் நிதி ஒதுக்கீட்டை வெட்டி வருகிறது. கொரோனாவிற்கு பிறகு தலித் மக்கள் பெருமளவு புறக்கணிக்கப் படுகின்றனர். கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு பொதுவிநியோக திட்டம், கல்வி, சுகாதாரம், வீடு வழங்குவது போன்ற சமூக நலத் திட்டங்களில் இருந்து பெருமளவு விலகி வருகிறது. இதனால் கிராமப்புற உழைப்பாளிகள், குறிப்பாக, தலித் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். நூறுநாள் வேலை திட்டத்தில் பணி வழங்கும் நாட்களை அதிகரித்து கூலியை உயர்த்தா மல், நிதி ஒதுக்கீட்டையே படிப்படியாக குறைத்து வருகிறது. மாவட்டங்களில் வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியை கூட தர மறுக்கின்றனர். இத்தகைய சூழலில் சங்கத்தின் 10வது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி, ஒன்றிய அரசின் மத ரீதியாக மக்களை பிரிக்கும் வகுப்புவாத கொள்கை, சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து கிராமப்புறங்க ளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.லாசர்
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.லாசர்,“100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருவதால் தமிழ கத்தில் 40நாட்களுக்கும் குறைவாகவே வேலை கிடைக்கிறது. 281 ரூபாய் என கூலி நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் 200 ரூபாய்தான் தரப்படுகிறது” என்றார். சங்கத்தின் 10வது மாநில மாநாடு பிப்ரவரி 4-6 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட், பி.சிவதாசன் எம்.பி., விக்ரம் சிங், கோமலகுமாரி மற்றும் ஏ.லாசர், வீ.அமிர்தலிங்கம், எஸ்.சங்கர் (தமிழ்நாடு), அமியபத்ரா (மேற்குவங்கம்), எஸ்.சந்திரன் (கேரளா) உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.