சென்னை, மே 2 - ஆட்சியாளர்களை வெல்லும் வலிமை தொழி லாளி வர்க்கத்திற்கு உள்ளது என்று சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார். 137வது மே தினத்தை யொட்டி சிஐடியு-ஏஐடியுசி மத்தியசென்னை மாவட்டக் குழு சார்பில் புரசைவாக் கத்தில் பேரணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏ.கே. பத்மநாபன் பேசியதன் சாராம்சம் வருமாறு: தமிழ்நாடு அரசு தொழிற் சாலைகள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை திரும்ப பெற்றது தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். உ.பி. அரசு ராணுவம், எஸ்மா சட்டத்தை பயன்படுத்தி மின்சார துறையை தனியார்மய மாக்க முயற்சித்தது. தொழிலாளர்கள் ஒற்று மையுடன் போராடி அதை முறியடித்தனர். காஷ்மீர், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் மின்சார தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றுள்ளனர். மோடி உள்ளிட்டவர்களை வெற்றி கொள்ளக் கூடிய வல்லமை தொழிலாளி வர்க்கத்திற்கே உள்ளது. ஒன்றிய அரசு தொழிலா ளர் சட்டங்களை 4 தொகுப்பு களாக மாற்றியுள்ளது. இனி அதில், சட்டத் திருத்தமின்றி அறிவிக்கைகள் வாயிலாக ஆட்சியாளர்கள் விரும்பும் மாற்றங்களை செய்ய முடியும். வங்கி உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு கொடுக்க புதிய புதிய உத்திகளை வகுத்து வருகின்றனர். சேலம் இரும்பு ஆலை, பிஎச்எல் உள்ளிட்டவை களை தனியார்மயமாக்க முயற்சிக்கின்றனர். இவற் றையும் முறியடிப்போம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் பாஜக
அஞ்சல் துறையில் உள்ள பெரும்பான்மை பெற்ற சங்கத்தின் அங்கீ காரத்தை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துள்ளது. நீதி மன்ற தீர்ப்பு உள்ளிட்டவை களை மீறி செயல்பட்டு வருகிறது. பாஜக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால், தொழிற்சங்க உரிமையே இருக்காது. தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். பொது எதிரியை எதிர்க்க, தொழிலாளி வர்க்கம் ஆதரிக்கும் சூழலை திமுக கொண்டிருக்க வேண்டும். முதலாளி வர்க்கம் தொடுக்கும் தாக்குதலை எதிர்த்து உலகம் முழுவ தும் உழைக்கும் வர்க்கம் போராடிக் கொண்டு இருக்கிறது. ஏகாதிபத்தியம், பெருமுதலாளித்துவம், சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், சமூக மாற்றம், சுரண்டலற்ற உலகம் அமை யவும் உலக தொழிலாளர் களின் அங்கமாக பாடுபடு வோம். மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க ஒன்றிய அரசை வீழ்த்து வோம். இவ்வாறு அவர் பேசி னார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மு.சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஏஐடியுசி தேசியச் செய லாளர் சி.ஸ்ரீகுமார், சிஐடியு மாவட்டத் தலைவர் ம.தயாளன், செயலாளர் சி.திருவேட்டை, பொரு ளாளர் எஸ்.பாலசுப்பிர மணியம், க.புகழேந்தி, ஏஐடியுசி தலைவர்கள் ஏ.எஸ்.கண்ணன், எஸ்.எஸ். சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.