புதுக்கோட்டை, செப்.7 - புனல்குளத்தில் எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ஐந்து ஏழைக் குடும்பங் களுக்கான இலவச வீட்டை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளத்தில் காசி யம்மாள்-பொன்னுச்சாமி, விஜயலட்சுமி-பன்னீர் செல்வம், மகமாயி-இடும் பையா, உதயராணி-கருப்ப சாமி, விமலா-குமார் ஆகிய தம்பதியரின் குடும்பத்திற்கு இலவச வீடுகளை எய்டு இந்தியா நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ளது. கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். திமுக ஒன்றிய துணைச் செய லாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். புதிய வீடுகளை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் எம்.சின்ன துரை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகை யில், “எய்டு இந்தியா நிறு வனம் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட காலத்தி லிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. கொரோனா காலத்திலும் ஏழை மக்களுக் கான பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் முழுவதும் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை களுக்கு, ஏராளமான வீடு களை எய்டு இந்தியா நிறு வனம் கட்டிக்கொடுத்து வரு கிறது. மேலும், கல்விக் கட்ட ணம் செலுத்த முடியாத ஏராளமான ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவை களைச் செய்து வருவது பாராட்டுக்குரியது” என்றார்.