மதுரை, செப்.3- கம்யூனிஸ்ட்கள் அழியமாட்டார்கள்; அதிமுகதான் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார். மதுரை மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். துவரிமான் மந்தையில் செப்டம்பர் 3 செவ்வாய்க்கிழமையன்று வாக்கா ளர்களுக்கு நன்றி தெரிவித்து மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் மகத் தான வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தந்து உள்ளோம். அண்ணன் செல்லூர் ராஜூ அவர்கள் மிகக் கடுமையாக கோபப் பட்டு பேசியுள்ளார். என்ன காரணம் என்று தெரியவில்லை. மதுரையின் நகர் பகுதியில் ஜீவா நகர், ஜெய்ஹிந்த் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டத்தில் பேசிய அண்ணன் செல்லூர் ராஜு, அந்தப் பகுதிகளில் எல்லாம் கோபப்படாமல் பேசியவர்! துவரிமா னில் ஏன் கோபப்பட்டுள்ளார் என்று பார்த்தால், அதன் பின்னர் தான் தெரிந்தது, துவரிமான் நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுத் தந்தமைக்காக துவரிமான் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து வைக்கப்பட் டுள்ள மிகப்பெரிய விளம்பர பதாகை. அதனைப் பார்த்துத்தான் அந்த அளவுக்கு கோபப்பட்டுள்ளார். செல்லூர் ராஜூ அவர்களே! நாங்கள் தேர்தலின் போதே குறிப்பிட்டோம், இங்கு துவரிமான் சந்திப்பு நான்கு வழிச் சாலையில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் பேசியுள்ளோம், விரைவில் பாலம் வரும் என்று கூறினோம். அப்படி கூறி யதைப் போல இன்றைக்கு துவரிமான் நான்கு வழிச்சாலைப் பகுதியில் பாலம் கட்ட 46 கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்து விட்டு இன்றைக்கு வாக்களித்த வாக்கா ளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்து உள்ளோம்.
பாலம் கட்டுவதற்கு அனுமதியும், நிதி ஆணையும் பெற்றுத்தந்தமைக் காக ஊரின் சார்பில் நன்றி அறிவிப்பு செய்து பதாகை வைத்துள்ளார்கள். நல்ல விஷயத்தை செய்தால் பாராட்ட வேண்டும், அதுதானே வழக்கம்! அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள், ஏற்கனவே அமைச்சராக இருந் தார். தற்பொழுது மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரு கிறார். அவரே முன்னின்று இந்த பாலம் குறித்த வேலையை செய்திருக்கலாம். ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னராக இருந்து கொண்டு 46 கோடி ரூபாயை பாலம் கட்டுவதற்கு நான் பெற்றுக் கொண்டு வந்துள்ளேன். விருதுநகரில் துவங்கி மதுரை வழி யாக திண்டுக்கல் வரை மிக அதிகமாக விபத்துகள் நிகழ்கிற பகுதி துவரிமான் சந்திப்பு . ஒரு மாதத்திற்கு 15 முதல் 20 விபத்துக்கள் நிகழ்கின்றன. தொடர் மரணம் நிகழும் சந்திப்பாகவும் அது இருக்கிறது . அனைவரும் நம் வீட்டில் உள்ள வர்கள்; நம் உறவினர்கள்; நம்ம ஊரைச் சேர்ந்தவர்கள். அதனாலேயே பெரும் முயற்சி எடுத்து பாலத்தை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பாலம் கட்டுமானப் பணி துவங்க இருக்கிறது.
பாஜகவை எதிர்க்காத கட்சி காணாமல் போகும்
கம்யூனிஸ்டுகள் அழிந்து விடு வார்கள் என்று செல்லூர் ராஜு சொல்லிக் கொண்டிருக்கிறார். “அண்ணே நாங்கள் அழிய மாட்டோம். நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு 35 ஆண்டு களுக்குப் பின்னர் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உங்கள் முன் வந்து நிற் கிறேன். அதிமுக தான் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. மதுரை தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. அண்ணன் செல்லூர் ராஜுவுக்கு பணிவோடு சொல்லிக் கொள்வது, பாசிச பாஜகவை எதிர்க்காத எந்த மாநிலக்கட்சியும் கரைந்து காணாமல் போகும். அதுதான் கடந்த அரை நூற் றாண்டு இந்திய அனுபவம். கடைசியாக ஒடிசா மாநில பிஜு ஜனதாதளம் வரை இதுதான் நடந்துள்ளது. பாஜக இன்று தமிழ்நாட்டை வஞ்சிக் கிறது. மதுரையை வஞ்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தற்பொழுது வரை பிரச்சனையாகத் தான் உள்ளது. மதுரை மெட்ரோ பணிக்கு பணம் தர மறுக்கிறார்கள். தமிழ் நாட்டுக்கான உரிமைகள் பறிக்கப்படு கின்றன. அதனை எதிர்த்து போராடி உங்களது கட்சியை வளர்க்கப் பாருங் கள். இவ்வாறு அவர் பேசினார்.