சென்னை, மார்ச் 20- அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டை யில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் புதனன்று (மார்ச் 20) செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, பதினெட்டா வது மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக சார் பில் போட்டியிடும் 16 வேட்பா ளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார். இதன்படி தொகுதி வாரி யாக, சென்னை வடக்கு - ராய புரம் மனோ, சென்னை தெற்கு - ஜெயவர்தன் (முன் னாள் அமைச்சர் டி.ஜெயக் குமார் மகன்), காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோ ணம் - ஏ.எல். விஜயன், கிருஷ் ணகிரி - வி. ஜெயப்பிரகாஷ், ஆரணி - ஜி.வி. கஜேந்திரன், சேலம் - விக்னேஷ், தேனி - நாராயணசாமி, விழுப்புரம் (தனி) - ஜெ. பாக்யராஜ், நாமக்கல் - எஸ். தமிழ்மணி, ஈரோடு - ஆற்றல் அசோக் குமார், கரூர் - கே.ஆர்.எல். தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரகாசன் (முன்னாள் எம்எல்ஏ), நாகப்பட்டினம் (தனி) - சுர்ஜித் சங்கர், மதுரை - டாக்டர் பி. சரவ ணன் (முன்னாள் எம்எல்ஏ), இராமநாதபுரம் - பா. ஜெய பெருமாள் ஆகியோர் அதி முக வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங் கள் கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புரட்சி பாரதம், உழவர் உழைப்பாளர் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமு திகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறோம். எஸ்டி பிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழ கத்திற்கு தென்காசி தொகுதி யும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், “மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகிவிட்டது. விரைவில் தேர்தல் அறிக்கை யும் வெளியிடப்படும்” என்று தெரிவித்த எடப்பாடி பழனி சாமி, “அதிமுக கூட்டணிக்கு பாமக வராததால் எங்க ளுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. நாங்கள் மக்க ளோடுதான் கூட்டணி வைத்து இருக்கிறோம்” என்றும் கூறிக் கொண்டார்.